திருப்பூர், அக். 18 – திருப்பூர் முருங்கப்பாளையம் தோழர் கே.தங்கவேல் நினைவகத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கிளை சார்பில் வீரயுக நாயகன் வேள்பாரி வாசகர் அமர்வு நடத்தப்பட் டது. முருங்கப்பாளையம் வாலிபர் சங்கக் கிளை சார்பில் கற்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் மாதாந்திர வகுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி ஞாயிறன்று நடைபெற்ற இந்த அமர்வுக்கு வாலிபர் சங்கக் கிளைத் தலைவர் பிரவீன் தலைமை ஏற்றார். இதில் நாவல் ஆசிரியர் சு.வெங்கடேசன் எம்.பி., எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை முன் வைத்து மனோன்மணி உரையாற்றினார். இதன் மீது நிகழ்வில் பங்கேற்றோர் கருத்துகளை பரிமாறினர். இதில் கிளைச் செய லாளர் வீரமுத்து உட்பட 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.