ஈரோடு, பிப். 13- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வியாழனன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரி வித்தார். . ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதவியேற்றுள்ள வி.சி.சந்திரகுமார் வியாழ னன்று சூளை பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரி வித்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் “போலி வெற்றி” என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி அதிமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் இவ்வாறு போலி வெற்றியை அதிமுக பெற்றிருக்கலாம். ஆனால் எனது வெற்றி உண்மையானது. ஏறக்குறைய ஒரு லட்சம் வாக்கு வித்தி யாசத்தில் நான் வெற்றி பெற்றுள்ளேன். அதிமுகவின் 75 சத வீத வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளது. எனவே போலி என்பது நிராகரிக்க கூடியது. இத்தேர்தலில் முதல்வரின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்களுக்கு ஆதரவாக மக்கள் பெரு வாரியாக திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அது மட்டு மல்லாமல் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியின் சேவைகளுக்காகவும் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர் தல் சமயத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர். இன்னும் 15 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட கால பிரச்சினை களை ஓராண்டு காலத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக் கப்படும். எனது செயல்பாடுகளை 15 நாட்களுக்குள் பாருங் கள் என்று அவர் கூறினார். முன்னதாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் பெரி யார் அண்ணா கலைஞர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.