districts

img

ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

கோபி, ஆக. 10- ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார் பில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோபி பேருந்து நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாய விளைப்பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். விவசாய கடன்களை முழுமையாகத் தள்ளு படி செய்ய வேண்டும். ஓராண்டு காலமாக நீடித்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி களுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். தவிச  மாவட்டச் செயலாளர் சிஎம்.துளசிமணி,  எஸ்.வி.மாரிமுத்து, கிவே.பொன்னையன்,  விஎஸ்.பழனிச்சாமி, கே.பழனிச்சாமி,  கே.ரத்தனம், எஸ்.பொன்னுச்சாமி உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.