ஈரோடு, ஜூன் 19- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செல்போன் செயலி மூலம் கணக்கீட்டு பணி மேற்கொள்ள கைபேசி அல்லது டேப் வழங்க வேண்டும். இணைய வசதிக்கு ரீசார்ஜ் செய்ய மாதந்தோறும் ரூ.500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு கணக்கீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.விஸ் வநாதன் தலைமை வகித்தார். மண்டலச் செய லாளர் சி.ஜோதிமணி, கிளைச் செயலாளர் பி. ஸ்ரீதேவி ஆகியோர் கோரிக்கைகளை வியக்கி பேசினர். முடிவில், துணை ஒருங்கிணைப்பா ளர் எஸ்.பழனியம்மாள் நன்றி கூறினார்.