ஈரோடு, மார்ச் 12- நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க ஈரோடு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை பணி கள் துவங்கி உள்ளது. ஒவ்வொரு அறுவடைக்கு முன்ன தாகவே, அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையங் கள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பே அறுவடை தொடங்கப்பட்ட நிலையில், ஓரிரு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங் கள் திறக்கப்படாமல் உள்ளது. அதன் ஒரு பகுதியாக டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் கடந்த 7 ஆம் தேதி திறக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,ஏளூர், இந்திராநகர், நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் மையத்தின் முன்பு குவியலாக குவித்து வைத்துள்ளனர். ஆனால், இதுவரை நேரடி நெல் கொள் முதல் மையம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து விவசா யிகள் கூறியதாவது, கடந்த 5 நாட்களாக அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து விட்டு, இரவு நேரங்களில் காவல் இருக்க வேண்டிய நிலை உள்ளது. மழை பெய் தால் நெல் அனைத்தும் வீணாகிவிடும். எங்கள் வாழ்வா தாரமும் பாதிக்கப்படும். இதனால் உடனடியாக நெல் கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.