districts

img

கனமழையால் உருக்குலைந்த மலைவாழ் குடியிருப்புப் பகுதி!

உடுமலை, டிச.15- கனமழையால் திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதி  உருக்குலைந்தது போல் காணப் படும் நிலையில், விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை  வட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவடாப்பு, குழிப்பட்டி,  குருமலை, கருமுட்டி, பூச்சிகொட்டாம் பாறை, திருமூர்த்திமலை, ஈசல்திட்டு, தளிச்சி, கோடந்தூர் உள்ளிட்ட 18 குடி யிருப்புப் பகுதிகள் உள்ளன. இதில் சில குடியிருப்புப் பகுதிகள் மலை அடி வாரப்பகுதியிலும், அதிகமான குடி யிருப்புகள் அடர்வனப்பகுதியிலும் பல கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. ஒரே மலைப்பகுதி யிலுள்ள மாவடாப்பு, குழிப்பட்டி, குரு மலை, பூச்சிக்கொட்டாம்பாறை மற் றும் மேல்குருமலை குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக் கும் மக்கள், படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்கு உடுமலை நகருக்கு வர  வேண்டும் என்றால், கோவை மாவட் டம், அட்டகட்டி வழியாக சுமார் 60  கிலோ மீட்டர் சுற்றிதான் வர வேண் டும். மேலும், திருமூர்த்திமலை வழி யாக உடுமலை செல்ல அடர்வனப் பகுதி வழியாக தான் வர முடியும். இப் படி அடிப்படை வசதிகள் கிடைக்கா மல் மக்கள் இருக்கும் நிலையில், தற் போது இடைவிடாமல்்பெய்து வரும் கனமழையால், வீடுகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. மலைஅடிவாரப்பகுதியான திரு மூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சுமார் 110 குடும்பங்க ளில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். குடிசை யாகவும், தகர கொட்டாகையாகவும், பழைய காரை வீடுகளாக உள்ள இப் பகுதி மக்களுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இத னால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் உள் ளது. ஆனால், பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அம ணலிங்கேஸ்வரர் கோவில் பகுதிக்கு செல்ல முடியாமல் உள்ளதை பெரிது படுத்தும் அரசு அதிகாரிகள், அப்பகுதி மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் குறித்து கவலைப்படுவதில்லை. மேலும், உடுமலை - மூணாறு சாலையில், கேரள மாநில எல்லைப் பகுதியான கோடந்தூர், தளிச்சி வயல் பகுதியில் வசிக்கும் மக்கள் தற் காலிக கடைகள் அமைத்து வனப் பொருட்களை விற்பனை செய்து வரு கின்றனர். இம்மக்களின் முக்கிய வாழ் வாதரமாக இருக்கும் இந்த கடைகள் அனைத்தும் தற்பொழுது பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டன. திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் பகுதியில் 40  வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீடு களின் சுவர்கள் மழையின் காரணமாக  இடிந்து விழுந்தன. மற்ற வீடுகளும்  இடிந்து விழுந்துவிடும் நிலையில் உள் ளன. தளி பேரூராட்சி மூலம் வீடுகள்  திட்ட மதிப்பீடு செய்து, மாவட்ட நிர்வா கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. எனவே, மாவட்ட நிர்வாகம்  விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து வீடு கள் கட்ட ஏற்பாடு செய்தால், வீடு  இடிந்து விழுந்து உயிர் சேதம் இல்லா மல் மலைவாழ் மக்களை காக்க முடியும்.  எனவே மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மலை வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.