தருமபுரி, ஜூலை 18- கெண்டையணள்ளி ஊராட்சி மன்ற கூட் டத்தை நடத்தாமல் இழுத் தடிப்பதாகவும், உடனடி யாக இம்மன்றத்தில் கூட் டத்தை நடத்த வேண்டும் வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் கெண்டையணள்ளி ஊராட்சி உள்ளது. அதிமுகவை சேர்ந்தவர் பஞ்சாயத்து தலைவராக உள் ளார். இந்நிலையில் இந்த ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் முறையாக நடைபெறவில்லை. இதனால் மக்களின் பிரச்ச னைகள் குறித்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் பேசமுடிய வில்லை. ஊராட்சியின் முறையான வரவுசெலவு கணக்கு கள் கான்பிப்பதில்லை. இதுகுறித்து தலைவர் மற்றும் ஏரியூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் பலமுறை முறையிட்டும் மாத கூட்டத்தை நடத்தவில்லை. உடனடியாக கூட்டத்தை நடத்த வேண்டும் என கெண்டையணள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி யிடம் மனு அளித்தனர்.