உடுமலை, பிப்.20- உடுமலை ஊராட்சிகளில் கடந்த மூன்று மாதங்களாக ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அதை உட னடியாக தரக்கோரி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலரி டம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, உடுமலை பகுதியில் ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் கடுமையான நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கு தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக சம்பளப் பாக்கியை முழுமையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியத்திடம் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ரங்கராஜ் தலைமையில் கோரிக்கை மனு அளிக் கப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பளம் வழங்குவ தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தார். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் தெரி விக்கையில், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய சம்பளத்தை வரும் வாரத் தில் வழங்காவிட்டால் ஒன்றிய அலுவல கத்தின் முன்பு போராட்டம் நடத்து வோம் என்று அதிகாரிகளிடம் தெரிவித் ததாக தெரிவித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கனகராஜ், பொருளாளர் சுப் புலட்சுமி மற்றும் குழு உறுப்பினர்கள் வனிதா, வஞ்சிமுத்து, தமிழ்தென்றல், ராமசாமி, ரமேஷ், மாசாணி, மகேஸ், மகாலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.