கோவை, மே 15- நாடாளுமன்ற உறுப்பினர் நிதி யிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் திட்ட பணிகளுக்கு மாநகராட்சி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர்கள் வலியு றுத்தியுள்ளனர். கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் திங்க ளன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட மண்டல தலை வர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் 75 திட்டங் களுக்கான ஒப்புதல் பெறப் பட்டது. இதில், கோவை பந்தய சாலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனித் தனியாக பெயர் சூட்டுகிற வகை யில், வருமான வரித்துறை அலுவல கத்தை மையப்படுத்தி, ஐடி சர்க்கிள் (வளாகம்) என்கிற பெயர் சூட்டுகிற தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதற்கு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் இல்லம், மாவட்ட நீதிபதிகளின் இல்லங்கள் மற்றும் பல்வேறு அலு வலகங்கள் செயல்படுகின்றன. எனவே, தனிப்பட்ட பெயர்களை ஒவ்வொரு வளாகத்திற்கு சூட்டு வது பந்தயசாலை பகுதிக்கு பொருத்தமற்றது என கருத்து தெரி வித்தனர். அதேபோல கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில், சிங்கா நல்லூர் பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றி, அதே பயனாளிகளுக்கு ஒரு ரூபாய் கூட பெறாமல் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர ஒப்புதல் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில், சூயஸ் நிறுவன ஊழியர்கள் ஒரு பகுதி யில் முழுமையாக பணியை முடிக் காமல், வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால், பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதைப் பற்றி கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் வழங் குவதில்லை என குற்றஞ்சாட்டி னார். மேலும், சூயஸ் நிறுவனம், மாந கராட்சியுடன் செய்துள்ள ஒப்பந்த நகலை அனைத்து மாமன்ற உறுப் பினர்களுக்கு வழங்க வேண்டும். இதனால் ஒப்பந்தத்தை தெரிந்து கொண்டு அதற்கு உண்டான பணி களை செய்யச் சொல்ல ஏதுவாக இருக்கும், என்றார். மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் பேசுகையில், கோவை மாநகரப் பகுதியில் பணியாற்றுகிற தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையை செய்ய மாநகராட்சி ஏற்படு செய் துள்ளதாக தெரிவித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வெ. இராமமூர்த்தி, பூபதி ஆகியோர் பேசுகையில், கோவை மாநகர பகுதிகளில், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி நிதி யிலிருந்து, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ஆனால், இதற்கு மாநகராட்சி ஒப்பு தல் அளிக்காமல் இழுத்தடித்து வரு வதாகவும், நிதி ஒதுக்கீடு செய்த பணிகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கிட வேண்டும், என்றனர். அதேபோல 13 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுமதி பேசுகையில், 13 ஆவது வார்டில் சுகாதார நிலையம் கட்டுவதற்கும், ரேசன் கடை கட்டுவதற்கும் ஒரே இடத்தை குறிப்பிட்டுள்ளதாக சொல்லி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பத்தை ஆய்வு செய்து உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியினை மக்களுக்காக கட்ட டங்கள் கட்டி பயன்பாட்டிற்கு தர வேண்டும், என்றார்.