சென்னை - ராயபுரம் அச்சகம் உட்பட இந்திய ரயில்வேயில் உள்ள ஐந்து அச்சகங்களை மூடும் முடிவினை ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே வாரியம் கைவிட வலியுறுத்துமாறு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியிடம், தட்சிணா ரயில்வே ஊழியர் சங்கத்தின் (டிஆர்இயு) துணைப் பொதுச் செயலாளர் கே.பிஜு, தட்சிணா ரயில்வே ஓய்வூதியர் சங்க (டிஆர்பியு) உதவிப் பொதுச் செயலாளர் கே.சி.முருகேசன் ஆகியோர் மனு அளித்தனர்.