அவிநாசி, ஜூன் 27 – தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அவிநாசி ஒன்றிய 3ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அவிநாசி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு புதுப்பா ளையம் என்.சசிகுமார் தலைமை வகித் தார். ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன் கொடி ஏற்றிவைத்தார். ஒன்றிய துணை செயலாளர் ஆர் பழனிச்சாமி, பொறுப் பாளர்கள் ஆர்.ராஜேந்திரன், என்.உஷாதேவி, என்.சாந்தி, ஆர். சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட தலைவர் டி.ஜெய பால் மாநாட்டை துவக்கிவைத்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர். ஏ. சண்முகம் ஆகியோர் பேசினர். வீடு இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக் கும் வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் அமைத்து தர வேண்டும். விண்ணப் பித்த அனைவருக்கும் உதவி தொகையை ரூ.1500 லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக் கும் சிறுகுறு தொழில் செய்வதற்கு அனைத்து வங்கிகளிலும் எளிமையாக கடன் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளி லும் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கி 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ஆர்.காளி யப்பன், ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.மகாதேவி மாநாட்டை ஒருங்கி ணைத்தனர். இதில் புதிதாக சங்கத்த லைவர் எம்.சந்திரகலா, செயலாளர் என். சசிகுமார், துணைத் தலைவர்கள் பி.மகாதேவி, கருப்புசாமி, துணை செயலாளர்கள், சரவணன், குமார், பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.