ஈரோடு, ஜன. 6- ஈரோடு மாநகராட்சி யில் வணிக கட்டடங்க ளுக்கு ஒவ்வொரு வருட மும் ஆறு விழுக்காடு அநி யாய வரி உயர்வு செய் வதை கைவிட வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மாநக ராட்சி நான்காவது மண்டல அலுவலகம் முன்பு மூலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு மாநகராட்சியில் வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கான அநியாய வரி உயர்வை கைவிட வேண்டும். உதய் திட்டத் தின் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தி மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்துவதை கைவிட வேண்டும். தெரு நாய்களிடமிருந்து பொதுமக்களையும், குறிப்பாக குழந்தை களையும் பாதுகாக்க வேண்டும். பாதாள சாக்கடை இணைப்பிற்கு பொதுமக்களிடம் வசூல் செய்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற் றிய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பல்வேறு காரணங்களுக் காக தோண்டப்பட்ட சாலைகள் சமன் இன்றி கிடப்பதை சமப்படுத்தி புதிய தார்ச் சாலைகள் அமைக்க வேண்டும். வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதை நிறுத்த எழுத்துப் பூர்வமாக கொடுத்த வாக்குறுதியை மாநக ராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். மாந கராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அவர்களுக்கு பணி நிரந்த ரம் வழங்க வேண்டும். நான்காவது மண்ட லத்தில் செயல்படுத்தப்படும் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை முறைகேடு இல்லா மல் நிறைவேற்றி பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகம் முன்பு மூலப்பாளையத்தில் திங்களன்று மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராஜா தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காசிபாளையம் முன்னாள் பேரூராட்சியின் தலைவர் கே.துரைராஜ், மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, சி.முரு கேசன், மாவட்ட குழு உறுப்பினர் பா.லலிதா மற்றும் தாலுகா செயலாளர் என்.பால சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மண்டல அலு வலகத்தில் மனு அளித்தனர். முடிவில், என். பழனிசாமி நன்றி கூறினார்.