உடுமலை, மார்ச் 25- உடுமலை நகராட்சியில் வேலை செய்யும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு, நக ராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட வேண் டிய பிஎப் தொகை கடந்த ஒரு வருடங்க ளாக கட்டப்படாமல் உள்ளது என்று புகார் எழுந்துள்ளது. உடுமலை நகராட்சியில், தூய்மை பணி யாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் என்று மொத்தம் 72 நிரந்தர தொழிலாளர்கள் உள்ள னர். இவர்கள் பெறும் மாத சம்பளத்தில் பிடித் தம் செய்த பிஎப் தொகையுடன், நகராட்சி நிர் வாகம் இவர்களுக்கு கட்ட வேண்டிய பிஎப் தொகையை சேர்த்து கட்ட வேண்டும். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நகராட்சி நிர்வா கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்க ளுக்கு கட்ட வேண்டிய பிஎப் தொகை கட்டப்ப டாமல் உள்ளது. அனைவருக்கும் முன் உதா ரணமாக இருக்க வேண்டிய நகராட்சி நிர்வா கம், தூய்மை பணியாளர்களின் பிஎப் பணத்தை அரசுக்கு செலுத்தாமல் இருப்பது கண்டிக்கதக்கது. எனவே நகராட்சி நிர்வாகம் தங்க ளுடைய தொழிலாளர்களின் பிஎப் தொகையை உடனடியாக கட்ட வேண்டும். மேலும் தினக்கூலி அடிப்படையில் தனியார் நிறுவனங்களால் தூய்மை பணியில் ஈடுப டுத்தப்படும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர் களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.