சேலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார் பில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு விபத்தில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஓமலூர் காந்தி நகர் பகுதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, மாவட்டத் தலைவர் ஆர். வைரமுனி, ஓமலூர் மாத சங்க நிர்வாகி மகேஸ்வரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.