districts

img

லக்கிம்பூர் கேரி தியாகிகளுக்கு அஞ்சலி

உடுமலை, அக்.3- லக்கிம்பூர்கேரி விவசாயத் தியாகி களுக்கு, வியாழனன்று உடுமலையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார் பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  தில்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து வீரம் சொறிந்த போராட்டத்தை நடத்தினர். தலைநகர் தில்லியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதர வாக நாடு முழுவதும் விவசாயிகள்  தன்னெழுச்சியான போராட்டத்தை  முன்னெடுத்தனர். இப்போராட்டங் களை ஒடுக்க ஒன்றிய பாஜக அரசு  பல்வேறு முயற்சிகளை மேற்கொண் டது.  இதன்தொடர்ச்சியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம்  தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம், இலக் கிம்பூர்கேரி என்ற இடத்தில் விவசாயி கள் பேரணியாக சென்றனர். அப்போது  ஒன்றிய அமைச்சர் ஆசிஷ் மிஸ்ராவின் மகன் ஆகாஷ் மிஸ்ரா, பேரணியாக சென்றவர்கள் மீது காரை ஏற்றினார். இதில், நான்கு விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிக்கையாளர் படுகொலை செய்யப்பட்டார். ஓராண்டு காலம் நடை பெற்ற விவசாயிகளின் வீரம் செரிந்த போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரத் தியாகிகளாயினர். இவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு  தினம் வியாழனன்று அனுசரிக்கப் பட்டது.  இதில், விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலை, மின்சார திருத்த மசோ தாவை திரும்ப பெறுதல், விவசாய போராட்ட தியாகிகளுக்கு நினைவிடம்  கட்ட நிலம் ஒதுக்குதல், நிவாரணம்  வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை களை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு, இதுவரை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது இந்த கோரிக்கை தொடர் போராட்டங்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தி  வருகிறது. தியாகிகள் நினைவு நாளில்  அந்த போராட்டங்களை மேலும் முன் னெடுப்பது என இந்த தியாகிகள் பெய ரில் உறுதி ஏற்கப்பட்டது. முன்னதாக, வியாழனன்று தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர். குமார் தலைமையில் உடு மலை, ஸ்டாலின் நிலையம் முன்பு நடை பெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்  தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட துணைத் தலைவர் உடுக்கம் பாளையம் எஸ்.பரமசிவம், உடுமலை கமிட்டி தலைவர் ஏ.ராஜகோபால், துணை தலைவர் முருகவேல், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் ஆ.பஞ்சலிங்கம், மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின்  உடுமலை ஒன்றியச் செயலாளர் கி. கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

அதேபோல் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஊத்துக்குளி ரயில டியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி யில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந் தசாமி, துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் (சிபிஐ) மாவட்டச் செயலாளர் எஸ்.சின்னசாமி, தாலுகா செயலாளர் ஜி.கே.கேசவன், விவசாயத் தொழிலா ளர் சங்கத் தாலுக்கா தலைவர் ஆர். மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். பெருமாநல்லூரில் ஐக்கிய விவசா யிகள் முன்னணி சார்பில் லக்கிம் பூர்கேரி விவசாயத் தியாகிகள் நினை வஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க வடக்கு ஒன்றியக் குழு  தலைவர் ரங்கசாமி, செயலாளர் எஸ்.அப்புசாமி, பொருளாளர் ஆறுமுகம், விவசாயத் தொழிலாளர் சங்க வடக்கு  ஒன்றியத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அவிநாசி ஒன்றியப் பகுதியில் கரு ணைபாளையம், போத்தம்பாளையம்  உள்ளிட்ட இடங்களில் மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி னர். அவிநாசியில் உயிரிழந்த தியாகி களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில்  கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்து  கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் காம ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், உன்னிகிருஷ்ணன், மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் சாமியப்பன், ஒன்றிய துணைச் செய லாளர் கருப்புசாமி, பால் உற்பத்தி யாளர் சங்க மாவட்டச் செயலாளர்  வேலுச்சாமி உள்ளிட்ட திரளானோர்  பங்கேற்றனர். 

கோவை

பஞ்சாப் மற்றும் ஹரியான போராட் டக் களத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு தழுவிய ரயில் மறி யல் போராட்டத்திற்கு விவசாய சங்கங் கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டி ருந்தது. அதன்படி வியாழன்று கோவை  மாவட்டம், சோமனூர் ரயில் நிலையத் தில் விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு, கட்சி சார்பற்ற தமிழக  விவசாயிகள் சங்கம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் சோமனூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசா யிகளை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனை  அடுத்து விவசாயிகள் சோமனூர் ரயில்  நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத ஒன்றிய பாஜக அரசை  கண்டித்து, முழக்கங்களை எழுப்பி னர்.