districts

img

மகளிர் இலவச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதா?

பொள்ளாச்சி - டிச - 29 பொள்ளாச்சி அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்  பயணியிடம் இலவச பயண சீட்டு இல்லை என நடத்துநர் மீது  நடவடிக்கை எடுத்த டிக்கெட்டி பரிசோதகரை கண்டித்தும், மகளிர் இலவச பயணத்திற்கு அதிகாரிகள் இடையூறு செய்வ தாக குற்றம்சாட்டி போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பொள்ளாச்சியில் இருந்து காந்தி ஆசிரமம் பகுதிக்கு இயங்கும் 23(A) எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப் பட்டு வருகிறது. இப்பேருந்து காந்தி ஆசிரமம் பகுதியில் இருந்து புதனன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் நடத்துநராக கனகராஜ் பணியில் இருந்தார். அப்போது திரு வள்ளுவர் திடல் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏறிய டிக்கட் பரிசோதகர் விஜயகுமார் பயண சீட்டு தணிக்கை யில் ஈடுபட்டார். அப்போது ஒரு பெண் பயணியிடம் இலவச  பயண சீட்டு இல்லாதது தெரிய வந்தது. இதனையடுத்து, நடத்துநரிடம் பயணச்சீட்டு வழங்காததால் உங்கள் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரி சோதகர் தெரிவித்துள்ளார். இத்தகவல் சக போக்குவரத்து ஊழியர்களுக்கு பரவியது.  இதனைத்தொடர்ந்து டிக்கெட்டி பரிசோதகரை கண்டித்து  பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லக்  கூடிய இருபதுக்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் ஆங்காங்கே  நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், தமிழக அரசு மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்கிறது,  அதிகாரிகள் அதை மதிப்பதில்லை. இதனால், தொடர்ந்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முரண்பாடு ஏற்படு கிறது என்றனர். முன்னதாக பொள்ளாச்சி புதிய பேருந்து  நிலையத்தில் குவிந்த போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர் களை பழிவாங்கும் நடவடிக்கையை போக்குவரத்து அதிகாரிகள் கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப் பினர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பின்னர், விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்கத் துவங்கினர்.