districts

img

போக்குவரத்து தொழிலாளர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம்

சேலம், ஜன.2- பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நடைபெற உள்ள வேலை நிறுத் தம் குறித்து பொதுமக்களிடம் விளக்கும் வகையில் சேலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மக்கள் சந்திப்பு இயக் கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரவுக்கும், செலவுக்கும் ஆன வித் தியாசத் தொகையை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உட னடியாக பேசி முடிக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த  தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள போக்கு வரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு  பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலை யத்தில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வுபெற் றோர் சங்கம் சார்பில் லியாகத் அலி  தலைமையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் சிஐடியு போக்குவ ரத்து தொழிலாளர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் ந.முகேசன், மாநில  துணைத்தலைவர் செல்லப்பன், செய லாளர் சந்திரன், பொருளாளர் கலைச் செல்வன் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்க செயலாளர் மணிமுடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.