கோவை, ஜூலை 25- அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, கோவையில் வியாழனன்று அரசு போக்குவரத்து ஊழியர்கள் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து ஆதரவைக்கோரி னர்.
பொதுப்போக்குவரத்தை பலப் படுத்த வேண்டும், அரசு போக்கு வரத்து ஊழியர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை உடனே துவக்கிட வேண் டும். ஒப்பந்த முறையை புகுத்தக் கூடாது. தனியார் மய நடவ டிக்கையை நிறுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் மக்களி டம் ஆதரவு கேட்டு பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர்.
இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் துண்டு பிரசு ரத்தை பொதுமக்களிடம் விநியோ கித்து ஆதரவை கேட்டனர். இதில், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் எம். வேளாங்கண்ணி ராஜ், சிஐடியு மாநில துணைத்தலைவர் செந்தில் குமார், மத்திய சங்க துணைத் தலை வர் ஜி.ஜே.ஜான் கென்னடி, கோவை கோட்ட அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க பொதுச் செய லாளர் எம்.பரமசிவம் உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.
உதகை
நீலகிரி மாவட்டம், பேருந்து நிலையத்தில், நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில், மக்கள் சந்திப்பு இயக்கம் சங்க துணை பொதுச் செயலாளர் பி.கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.வினோத் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் எல். சங்கரலிங்கம், மாவட்டப் பொருளாளர் நவீன்சந்திரன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார். இதில், சாமிநாதன், இஸ்மாயில், ராதாகிருஷ்ணன், ஓ.குமார், சந்தி ரன், பி. கணேஷ் உள்ளிட்ட போக்கு வரத்து ஊழியர்கள்ஏராளமானோர் கலந்து கொண்டனர்