தருமபுரி, ஆக.20- பகுதி நேர ஆசிரியர் களை, முழு நேர ஆசிரியர்க ளாக பணி மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை, மேல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண் டும் அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து, கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். 2012 ஆம் ஆண் டிற்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையில் நிய மிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரி யர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து முழுமை யாக விலக்கு அளிக்க வேண்டும். பதவி உயர் வின் போது தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற வீதியை நீக்க வேண்டும். தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும், முழு நேர ஆசிரியர் களாக பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் மாவட்டத் தலைவர் பெ.துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் க.கருணாநிதி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.பழனிச்சாமி, இணைச்செய லாளர்கள் எஸ்.திருலோகசந்தர், பி.கருப் பண்ணன், மாவட்ட சட்டச் செயலாளர் ஜே. கே.பாலகிருஷ்ணன், ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ஆர். சக்திவேல், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி கள் மற்றும் தமிழாசிரியர் கழக மாநில தலைமை நிலை செயலாளர் ப.நடராஜன், முன்னாள் மாவட்டப் பொருளாளர் எம்.சாம்ப சிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகள் ஜி.பொற்கொடி, கே.உமாமகேஸ்வரி, சு. ரத்தினம், சொ.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட இணைச் செயலாளர் மா.முருகன் நன்றி கூறினார். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டச் செயலாளர் கே.ஆர்.ரவி தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் எம்.மாயகிருஷ் ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் முன்னாள் செயலாளர் கோவிந்தன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட் டணியின் மாவட்டச் செயலாளர் ந.பெரிய சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.