சேலம், அக்.23- புயல் காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோ டம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப் பில், ‘டானா புயல்’ காரணமாக கன்னியாகுமரியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக அசாம் மாநி லம், திப்ரூகருக்கு இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் புத னன்று ரத்து செய்யப்பட்டது. மறுமார்க்கத்தில், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயி லும் புதனன்று ரத்து செய்யப்பட்டது. அதேபோல சாந்த்ரா காச்சி - மங்களூரு இடையிலான விரைவு ரயில் வியாழ னன்றும் (இன்று), மறுமார்க்கத்தில், மங்களூரு - சாந்த்ரா காச்சி இடையேயான விரைவு ரயில் அக்.26 ஆம் தேதி யன்று ரத்து செய்யப்பட்டுள்ளதென, அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.