districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனப்பணியாளர்களுக்கு பயிற்சி

கோவை, மார்ச். 16- காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது  குறித்து, கோவை வனக் கோட்டத் தில் உள்ள வனப் பணியாளர்கள் மற் றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சூழல் ஆர்வலர்கள் ஆகியோருக்கு தீ  தடுப்பு குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தமிழ கம் முழுவதும் கோடை வெயில் சுட் டெரிக்கிறது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொ ழிவு இல்லாததால் கடும் வறட்சி  நிலவுகிறது நீரோடைகள் அனைத் தும் காய்ந்துள்ள நிலையில் ஆங் காங்கே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது அதனை வனத்து றையினர் துரிதமாக செயல்பட்டு கட் டுப் படுத்தினாலும்  ஒரு சில இடங்க ளில் தொடர்ந்து சில நாட்களாக காட் டுத் தீ எரிந்து வருகிறது. இதில் நீல கிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 4 நாட்களாக காட்டு தீ எரிந்து  வருகிறது. இதனை கட்டுப்படுத்த  100க்கும் மேற்பட்ட வனத்துறையி னர் இரவு பகலாக பணியாற்றி வரு கின்றனர் எனினும் தீ கட்டுக்குள் வராததால், ராணுவ ஹெலி காப்டர்கள் உதவியோடு தீயை கட் டுப்படுத்த வனத்துறையினர் முயன்று வருகின்றனர். எனினும்  அதனை கட்டுப்படுத்த ஓரிரு தினங் கள் ஆகலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோடைகாலம் என்பதால் வனப்பகு தியில் காட்டுத் தீ பிடிக்க அதிக வாய்ப் புள்ளது. இதனைதொடர்ந்து வனத்து றையினருக்கு காட்டுத் தீயை கட்டுப்ப டுத்துவது குறித்த பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாக கோவை மாவட்ட வன அலு வலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் கோவை வனக் கோட்டத்தில் உள்ள வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சூழல் ஆர்வலர்கள் ஆகியோருக்கு தீ தடுப்பு குறித்த செயல்முறை விளக்கம் சனிக்கிழமை அன்று  அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் இந்த பயிற்சி வழங் கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட  வனப்பணியாளர்கள் சூழலியல் ஆர் வலர்கள் கலந்து கொண்டனர். சமத ளப் பகுதியில் தீ பிடித்தால் எவ் வாறு அணைப்பது, மலைப்பகுதி யில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப் பது என்பது குறித்த பயிற்சியும், ட்ரோன் மூலம் தீயை அணைப்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது இதுகுறித்து வனத்துறையினர் கூறு கையில், ஆங்காங்கே காட்டுத் தீ  பிடித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பணியாளருக்கு காட்டுத்தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி  வழங்கப்பட்டது. கோவை வனக் கோட்டத்தை சார்ந்த வனப் பணியா ளர்கள் வனப் பகுதியை ஒட்டி ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்தை ஒட்டி யாராவது தீ வைத்தாலோ அல் லது வனத்திற்குள் சென்று தீ வைத் தாலோ அவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் மலையடி வார கிராமங்களில் உள்ள விவசா யிகள் பொதுமக்கள் காட்டுத் தீ ஏற் பட காரணமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர் இந்த பயிற்சியின்போது உதவி வன பாது காவலர் ராஜ்குமார் வனப் பணியா ளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

நாமக்கல், மார்ச் 16- நாமக்கல் மாவட்டம், குமாரபாளைத்தில் மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு நவம்பர் மாதம்  துவங்கி நடந்து வருகிறது. இதனால் சர்வீஸ் சாலையில்  வாகனங்கள் திருப்பி விடப் பட்டன. சர்வீஸ் சாலையில் இரவு பகலாக எண்ணற்ற வாகனங்கள் சென்று வரு கின்றன. இச்சாலையில் ஆக் கிரமிப்புகள் அதிகம் உள்ள தால், வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல், மெது வாக ஊர்ந்து செல்லும் நிலை  ஏற்பட்டு வருகிறது. இதனால்  அடிக்கடி வாகன விபத்துக் கள் ஏற்பட்டு, பலரும் காய மடையும் நிலை ஏற்பட்டு  வருகிறது. பெரும் அசம்பா விதம் ஏற்படும் முன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி, குமாரபாளையம் துணை வட் டாட்சியர் செல்வராஜ், பள்ளி பாளையம் உதவி வட்டார  வளர்ச்சி அலுவலர் சொக் கலிங்கம், தட்டான்குட்டை ஊராட்சி தலைவர் புஷ்பா ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. குமார பாளையம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்த இளைஞர் ரயில் மோதி படுகாயம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்த இளைஞர் ரயில் மோதி படுகாயம் திருப்பூர், மார்ச் 16 - பிகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆசாத் (27) தனது  நண்பர்களுடன் சொந்த ஊருக்குச் செல்ல திருப்பூர் ரயில்  நிலையத்தின் 2ஆவது நடைமேடையில் நின்று கொண்டிருந் தார். அப்போது முதல் நடைமேடையில் உள்ள கடைக்கு சென் றுவிட்டு, மீண்டும் 2ஆவது நடைமேடைக்கு தண்டவாளத் தில் இறங்கி நடந்துள்ளார். அப்போது வந்த சபரி எக்ஸ்பிரஸ்  ரயில் ஆசாத் மீது, மோதியது. இதில் ஆசாத் தலையில் பலத்த  காயம் அடைந்தார். இளைஞரை மீட்ட ரயில் பயணிகள், ரயில்வே போலீஸார்  உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு கிறது. ஆசாத், குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறு வனத்தில் தொழிலாளியாக வேலை செய்துவந்ததும் போலீ ஸார் விசாரணையில் தெரியவந்தது.

பொதுக் கழிப்பறை கட்ட எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், மார்ச் 16 –  காங்கேயம் அருகே பொதுக் கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களை  அவதூறாக பேசிவருவோர் மீது நடவடிக்கை  எடுக்க கோரி, காங்கயம் டி.எஸ்.பி.,யிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். வியாழனன்று எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி சக்தி விநாயகபுரம் பகுதி மக்கள்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சக்தி  விநாயகபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தை களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை மேற்கொண்டு, அப்பகுதியில் அரசுக்குச் சொந்தமான 15 சென்ட் நிலம் ஒதுக் கப்பட்டு, கழிப்பறை கட்டிக் கொடுப்பதற்கு நில அளவீடும் மேற்கொள்ளப்பட்டது. 15 ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ்,  ரூ.7.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கழிப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட இடத்தில்  கழிப்பிடம் கட்டக்கூடாது என அப்பகுதியைச்  சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், கழிப்பிடம் கட்டித்தரக் கோரிய பெண்களை அச்சறுத்தும் வகையில் பேசி யுள்ளனர். எனவே, ஆதித்தமிழர் ஜனநா யகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில், சக்திவிநாயகபுரம் மக்கள் காங்கயம் டி.எஸ்.பி., பார்த்திபனிடம், கழிப் பிடம் கட்டித்தரவும், அது வரை தங்களுக்கு எதிர்ப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பு தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடி

திருப்பூர், மார்ச் 16- பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான் என  ஆ.ராசா எம்பி., குற்றம்சாட்டினார். திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க.  முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட ஆ.ராசா எம்.பி., கூறியதாவது, பாசிச  பாஜக ஆட்சியை எதிர் வரும் தேர்தலில் முறியடிப்போம். பாரா ளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள் ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். வரும் பாராளுமன்ற  தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி  பெறும். தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அதிமுக வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்ற னர். அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமி ழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ.8லட்சம் கோடி  முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய  அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தரா மல் காலம் தாழ்த்தி வருகிறது என்று பேசினார்.

காவிரி ஆற்றில் மணல் திருட்டு  தேடப்பட்டு வந்த நபர் கைது

நாமக்கல், மார்ச் 16- பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், கடந்த சில தினங்களுக்கு முன் வேலூர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட  நப ரைப் பிடித்து நடவடிக்கை எடுப்பதாக பரமத்திவேலூர் காவல்துறையினர் உறுதியளித்தனர். இந்நிலையில், வெள்ளியன்று வேலூர் உதவி ஆய்வாளர் குமார் தலை மையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட் டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்து வந்தது ராஜா என்பது தெரிய வந்தது. இதனையடுத்து வேலூர் காவல் ஆய்வா ளர் ரங்கசாமியின் உத்தரவின்பேரில், சட்ட விரோதமாக அனுமதியின்றி காவிரி ஆற்றில் மணல் எடுத்து வந்த  ராஜாவை கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.14 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
ரூ.14 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம் தருமபுரி, மார்ச் 16- தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். அதன் படி, வெள்ளியன்று நடைபெற்ற பட்டுக்கூடு ஏலத்திற்கு 45 விவசாயிகள் 3193 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இதில் வெண்பட்டு கூடுகள் அதிகபட்ச மாக கிலோ ரூ.491க்கும், குறைந்தபட்சமாக ரூ.362க்கும், சராசரியாக ரூ.450க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட்சத்து 39 ஆயிரத்து 386க்கு வர்த்தகம் நடைபெற் றது.

கிராவல் 3 யூனிட் மண் பறிமுதல் 

கிராவல் 3 யூனிட் மண் பறிமுதல்  கோவை, மார்ச் 16- கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் கடத்தலில் ஈடு பட்ட டிப்பர் லாரி ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து  3 யூனிட் மண் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் கடத்தப்படுவ தாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு தக வல் கிடைத்தது. அதன்படி கிணத்துக்கடவு வட்டாரத்தில் சுரங் கத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி னர். இந்நிலையில் வெள்ளியன்று காரச்சேரி மாரியம்மன் கோவில் அருகே புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி கள் அந்த வழியாக டிப்பர் லாரியை ஓட்டி வந்த சுரேஷ் என்ப வர், திடீரென லாரியை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனைக்கண்ட அதிகாரிகள் டிப்பர் லாரியை சோதனையிட்டபோது அதில் 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைடுத்து லாரியை கைப்பற்றிய சுரங்கத்துறை அதிகாரிகள் கிணத்துக்கடவு காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை சேலம், மார்ச் 16- இடங்கணசாலையில் பெரும் எதிர்ப்பை மீறி போலீஸ்  பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டு வருவதை கண்டித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட சின்னேரி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடங்கணசாலை, இ.காட் டூர், கஞ்சமலையூர், சாத்தம்பாளையம், மெய்யனூர், தூத னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி காவல் துறையின் பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் இந்த நடவ டிக்கையை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 10 நாட்களுக்கு மேலாக தங்களது வீடுகளில் கருப்புக்கொடி  கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இது வரை அரசு அதிகாரிகள் யாரும் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் மக்களை அழைத்து பேசி தீர்வு காணாததால் அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீ சார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது பிரச்சனைக்கு தீர்வு  காணும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி பொதுமக்கள் அனைவரும் பழைய நாட்டாமை கட்டடம் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிப்பு

தருமபுரி, மார்ச் 16- தருமபுரி பகுதியில் பொதுமக் களை அச்சுறுத்தி வந்த ஒற்றை  ஆண் யானையை, வனத்துறையி னர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த னர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ் செட்டி பகுதி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு ஆண் யானை ஒன்று வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரி யில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி யது. இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் உடனடியாக தரும புரிக்கு வந்து பொதுமக்களை அச்சு றுத்தி வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப்பகுதிக்குள் விரட் டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலை யில், இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப்பகுதிக்குள் நுழைந்தது. குறிப்பாக முத்தம் பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக் கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதி யில் விட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லார அள்ளியில் இருந்து கொடகார அள்ளி பகுதியில் மைலாப்பூர் கிரா மத்தில் தஞ்சமடைந்தது. வனத் துறையினர் இரவு பகலாக தேடு தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, ட்ரோன் மூலம் யானையை கண்கா ணித்து வந்தனர். இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலை மையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல்மலை அடிவாரபகுதியில் வெள்ளியன்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டனர். இரவு  நேரத்தில் காட்டிலிருந்து வெளியே றிய யானை விவசாய தோட்டங் களை சேதப்படுத்தி உணவை உட் கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர். உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ் ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத் துச் சென்றனர். கடந்த 3 வாரங்க ளாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால், அச்சத் துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.