districts

img

பாரம்பரிய பயிர் ரகங்கள் வேளாண் திருவிழா

கோவை, அக்.21- கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பயிர் ரகங் கள் வேளாண் திருவிழா நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் முன்னோடி விவ சாயிகள் பல்வேறு சிறப்பு பண்புகளை கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல பயிர் ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், அதிக விளைச்சல் தருவதாகவும், வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும், மருத்துவ தன்மை கொண்டதாகவும் உள் ளது. இத்தகைய பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்கள் தாவர மரபியல் ஆராய்ச்சி யாளர்களுக்கு தேவையான புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை  வழங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இதற் கான சிறப்பு கண்காட்சி நடத்திட தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படை யில் சிறந்த பண்புகளைக்கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டு பகுதிக்கேற்ற சிறந்த ரகங்ளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் இதுக் குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு வரு கிறது.

அதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட வேளாண்துறை சார்பில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் பாரம் பரிய பயிர் ரகங்கள் வேளாண் திருவிழா புத னன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் அகமது தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக் கத்தின் இயக்குநர் முருகன் முன்னிலை  வகித்தார். இந்த திருவிழாவில் 20க்கும் மேற் பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில்நுட்ப வணிக காப்பகம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண்  வணிகத்துறைகளின் மூலமும் இயற்கை  வேளாண் வழி விதைகள், பாரம்பரிய சிறு தானிய உணவுகள் மற்றும் மதிப்புக்கூட்டப் பட்ட பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக் கும் வைக்கப்பட்டிருந்தது. இந்த வேளாண் திருவிழாவில் தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி கள், அதிகாரிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு பாரம்பரிய ரகங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங் கள், செங்காம்பு கறிவேப்பிலை நாற்று, பாரம் பரிய பயிர் ரகங்கள் குறித்த தொழில்நுட்ப கையேடு அடங்கிய தொகுப்பு வழங்கப் பட்டது.

;