districts

img

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

கோவை, செப்.10- கோவையில் தக்காளி வரத்து குறைவாக இருப்பதால், விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இதை தவிர தொண்டாமுத்தூர், மதுக் கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளியை சில்லறை வியாபாரிகள் வாங்கி கடைகளில் விற்பனை செய் கின்றனர். இதனிடையே மார்க்கெட்டுகளில் 25 கிலோ எடை யுள்ள ஒரு பெட்டி தக்காளி ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.450  முதல் ரூ.500 விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.10  முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே  தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு பெட்டி தக்காளி ரூ.900 வரை விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ  தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை காரண மாக தக்காளி பூக்கள் கருகி விழுந்துள்ளன. இதனால் தற் போது தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல  மாதங்களாகவே தக்காளி ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனை யாகி வந்தது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். சிலர் தக்காளி விவசாயத்தை கைவிட்ட தால் தற்போது வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனிடையே மீண்டும் தக்காளி பயிர் செய்து அறுவடை செய்யும் வரை இந்த விலையேற்றம் இருக்கும், என்ற னர்.

;