districts

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, டிச.6 - மழை வெள்ள பாதிப்பு கள் காரணமாக மீட்பு மற்றும்  நிவாரணப் பணிகள் நடை பெற்று வரும் நிலையில், நான்காவது நாளாக (டிச.7) சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையை முழுவ தும் புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜம் புயல். சென்னையின் முக்கிய சாலைகளிலும் கூட இன்னும் மழை நீர்  முற்றிலும் வடியாத நிலை யில், திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், வியாழக் கிழமை(டிச.7) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப் பட்டுள்ளது. மழை சற்று ஓய்ந்துள்ளது. இருந்த போதும், அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வு மையம் அறிவித் துள்ளது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத் தியுள்ளது. பல பகுதிகளிலும் இன்னும் மின்விநியோகம் சீராக்கப்படாத நிலையில், சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு வியாழக் கிழமையும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப் பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இந்த 4 மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த கல்லூரி களுக்கு வருகிற டிச. 10 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கு டிச.11 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் கல்லூரிகளின் விடுதிகளில் படித்து வரும் மாணவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் விடுமுறை குறித்த அறிவிப்பு கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், வாட்ஸ்அப்  மூலமாகவும் தெரிவித்துள்ள னர். மேலும் பல கல்லூரி கள் நிவாரண முகாமாக இயங்கி வருவதால் கல்லூரி களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.