districts

img

திருப்பூர் புத்தகத் திருவிழா மக்கள் இயக்கமாக மாற வேண்டும்!

திருப்பூர், ஆக.28- திருப்பூர் 21 ஆவது புத்தகத் திரு விழாவை பெரும் மக்கள் இயக்க மாக மாற்ற வேண்டும் என்று ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.  திருப்பூர் கேஆர்சி சிட்டி சென்ட ரில் செவ்வாயன்று புத்தகத் திரு விழா ஆலோசனைக் கூட்டம் அரிமா மு.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் பா.சௌந்தர பாண்டியன் வரவேற்றார். இதில் 21  ஆவது புத்தகத் திருவிழாவை சிறப் பாக நடத்துவது குறித்து, வி.ராம மூர்த்தி, புக் ட்ரஸ்ட் நிர்வாகிகள் ஆர்.ஈஸ்வரன், அ.நிசார் அஹமது ஆகியோர் விரிவாக பேசினர். இதில் கடந்த 20 ஆண்டுகளாக  நடத்தப்பட்ட திருப்பூர் புத்தகத் திரு விழா மக்கள் மத்தியிலும் மாணவர் கள் குழந்தைகள் மத்தியிலும் ஏற்ப டுத்தி இருக்கும் சிறப்பான தாக்கங் களை அனுபவாதியாக எடுத்துக் கூறினர். மேலும் வாசிக்காத சமுதா யம் நாகரிக சமுதாயமாக இருக்க முடியாது. தொடர்ந்து மூன்று, நான்கு மாதம் புத்தகத் திருவிழா என்பது திருப்பூர் மற்றும் இந்த மாவட்டத்தின் பேச்சாக இருக்க வேண்டும். பெரும் மக்கள் இயக் கமாக நடத்த வேண்டும். புத்தகம்  வாங்குவது பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. தோராயமாக இந்தக் காலத்தில் 25 கோடி ரூபாய் அள வுக்கு புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த திருவிழாவை நடத்துவதன் முக்கிய நோக்கம் புத்தக விற்பனை மட்டுமல்ல, புத் தக வாசிப்பு என்பதை அனைவரின் பழக்கமாக மாற வேண்டும். குழந்தைகள் புத்தகம் வாங்கு வதற்கு அவர்களுக்கு பள்ளிகளின்  மூலம் உண்டியல் கொடுத்தால், குறைந்தது ஒரு மாத காலம் அதில் சிறு சேமிப்பு செய்து அந்தத் தொகையை கொண்டு வந்து புத்த கத் திருவிழாவில் புத்தகம் வாங்கு வார்கள். ஒரு லட்சம் மாணவர்கள் இடம் இந்த உண்டியல் கொடுக்கப் பட்டால் குறைந்தது 100 ரூபாய் சேமித்து அதில் புத்தகம் வாங்கி னால் அவர்கள் மூலம் மட்டுமே ஒரு  கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை  ஆகும். அத்துடன் மாணவர் திற னாய்வு போட்டிகள், புத்தக வாசிப்பு இயக்கத்தை சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  கடந்த ஆண்டுகளைப் போல அரசுடன் சேர்ந்து புத்தகத் திரு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டு வருகிறது. அரசு அனு மதி கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சி யரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு, புத்தகத் திருவிழா ஏற் பாடுகள் மேற்கொள்ளலாம். அத்து டன் பல்வேறு பணிகளை மேற் கொள்ள 19 குழுக்கள் முன்மொழி யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள் ளது.  வயநாடு நிவாரண நிதி  இந்தக் கூட்டத்தில் பின்னல் புக்  டிரஸ்ட் சார்பில் வயநாடு நிலச்சரிவு பேரழிவில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 50,000 நன் கொடை வழங்கப்படுவதாக தெரி விக்கப்பட்டது. அத்துடன் இந்நிகழ் வின் தலைவர் அரிமா ஜீவானந்தம் ரூ.50,000 வழங்குவதாக அறிவித் தார். பிரஸ் குமாரசாமி ரூ. 3000 வழங் கினார்.  குழந்தைகள் புத்தகம் வாங்க  சேமிப்பதற்காக டிகேடி கல்வி குடும் பத்தின் சார்பில் ஆயிரம் உண்டியல் கள் வாங்குவதாகவும், ஷகிலா பர் வீன் தெரிவித்தார். கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக், 2000 உண்டியல்களை வாங்கி அரசு பள்ளிகளுக்கு வழங்குவதாக அறி வித்தார்.  இந்நிகழ்வில் எம்பரர் பொன்னு சாமி, ஆசிரியர் பாலு, பின்னல் புக்  டிரஸ்ட், நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள் புத் தக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங் கேற்றனர். முடிவில் கனகராஜா நன்றி கூறினார்.