நாமக்கல், பிப்.8- நாட்டின் ஜனநாயகம், இறையாண்மை, மத நல்லிணக்கத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜக அர சிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் கண்டனம் தெரிவித்து முழங்கினர். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு அளிக்க மறுப்பது, பேரிடர் நிவாரண நிதி ஒதுக்க மறுப்பது, ஜிஎஸ்டி வரியில் உரிய பங்கீடு ஒதுக்க மறுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவது உள்ளிட்டு கூட்டாட்சி கோட் பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஆளு நர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறை வேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுப் பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் திற்கு எதிராக போட்டி அரசாங்கமாக செயல்பட வைப்பது உள்ளிட்டு ஜனநாயக விரோத எதேச் சதிகார நடவடிக்கையினை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் வியாழனன்று தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக, நாமக்கல் பூங்கா சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோ கன், கே.தங்கமணி, பி.ஜெயமணி, எஸ்.சுரேஷ், ஏ.டி.கண்ணன் மற்றும் திமுக ஒன்றியச் செயலா ளர்கள் தங்கவேலு, பழனிவேலு, தன்ராஜ், ரமேஷ், இளங்கோ, ஞானசேகரன், திமுக இளை ஞரணி அமைப்பாளர் பாலாஜி, மாணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணி, காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் சித்திக், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் செந்தில், மதிமுக மாவட் டச் செயலாளர் சேகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அன்புமணி, நகரச் செயலாளர் சிவகுமார், விசிக மத்திய மாவட்டச் செயலாளர் நீலவானத்து நிலவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் மணிமாறன், திராவிட கழக மாவட்டத் தலைவர் பெரியசாமி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அகமதுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட் சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். இதில் சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மேற்கு மாவட்டச் செயலாளர் சி.பழனியப்பன், மதிமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாவட்டச் செயலாளர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் ஜெய்சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல் வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் த.கு.பாண்டியன், சி.கே.சாக்கன் சர்மா, கருப்பண்ணன், கொமதேக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜி.அசோகன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் என்.சுபேதார், தமிழக வாழ்வு ரிமை கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலா ளர் டி.தவமணி, இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் ஏ.சிராஜீதீன், ஆதித்தமி ழர் பேரவை மாவட்டச் செயலாளர்கள் முருகன், ராஜ்குமார், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஜெயசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், திமுக ஒன்றியச் செயலாளர் சேட்டு நன்றி கூறினார்.
சேலம்
மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா தலைமை வகித் தார். இதில் திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செய லாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மத்திய மாவட் டச் செயலாளர் ரா.ராஜேந்திரன், மேற்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.ஆர். பி.பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாந கர மாவட்டச் செயலாளர் சி.சங்கேஸ்வரன், விடு தலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாநகரச் செய லாளர் இ.காஜாமொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.யுவராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் எஸ். சையது மூசா, திராவிட கழக மாவட்டச் செயலா ளர் இளவழகன், சிபிஐ (எம்எல்) மாவட்டச் செய லாளர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் இமாம் மொய்தீன், திராவி டர் விடுதலை கழக மாவட்டச் செயலாளர் ரா. டேவிட், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடி வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி நன்றி கூறினார்.
தோல்விகளால் சாதனை படைத்ததுதான் பாஜக!
தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில், 2014 ஆம் ஆண்டு மக்களின் வருமானத்தை பெருக்குவோம்; விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக உள்ளது. அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்தது தான் பாஜகவின் சாதனை. பாஜக ஆட்சியில் 1 லட்சத்து 48 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 86 சதவிகித விவசாயிகள் கடனை அடைக்க வழியில்லாமல் விவசாயத்தை கைவிட்டனர். வகுப்புவாத அரசியலை முன்னெ டுத்து, மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. சிறுபான்மை மக்களான இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களை தாக்குகின்றனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. எனவே, நாட்டின் இறையாண்மை, ஜனநாயகத்தை பாதுகாக்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த, மக்களிடையே தெருச் தெருவாக பிரச்சாரம் மேற்கொள்வோம், என்றார்.