பொள்ளாச்சி, ஜூன் 8- இறந்தவர்களின் உடல்களை புதைக்க சுடுகாடு இல்லாமல் பொள்ளாச்சியில் வாழ்கின்ற தலித் அருந்ததியர் மக்கள் அவ திப்பட்டு வருகின்றனர். பின்னர், போராட்ட அறிவிப்பையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுக்கான உறுதியளித்த னர். கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த நல்லூத்துக் குளி கிராமம், அருந்ததியர் காலனி யில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் ஆற்றங்கரையோ ரம் 6 க்கு 4 என்ற அளவில் மட்டுமே மயான வசதி உள்ளது. இதனால், ஒரு மாதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டால், ஏற்கனவே புதைத்த உடலின் மிச்சங்களை வெளியே எடுத்து வைத்துவிட்டுதான் மற்றொரு உடலை புதைக்கும் அவல நிலை உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கி றது. மயான வசதி ஏற்படுத்தி தரக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சிய ரிடமும், ஊராட்சி மன்ற தலைவ ரிடமும் பலமுறை கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினரும் தொடர்ந்து அதிகாரி களிடம் மனுக்கள் அளித்து வலி யுறுத்தி வந்தனர்.
இதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இந்நிலையில், அப்பகுதி யைச் சேர்ந்த நாகராஜன் என்ப வர் செவ்வாயன்று இரவு உயி ரிழந்தார். இதைத்தொடர்ந்து, புத னன்று இறந்தவரின் உடலை புதைக்க முடியாத சூழல் உரு வாகியது. ஆற்றங்கரையோரம் புதைக்க குழி தோண்டினால், ஒன்னரை அடி அளவிலேயே ஆற்று நீர் வெளியே வந்துவிடுகி றது. இதற்கிடையே இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் உள் ளாட்சி துறை உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். அவ் வாறு இல்லையெனில் பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொள் ளாச்சி வட்டாட்சியர் மல்லிகா தலைமையில் வருவாய் ஆய்வா ளர் தவமணி, கிராம நிர்வாக அலுவ லர் லட்சுமி, ஊராட்சி தலைவர் தர்ம ராஜ், காவல் ஆய்வாளர் நாகரா ஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் எம்.கணேசன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், மயான பிரச்சினை குறித்து போர் கால அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்ப டும். மேலும், சமத்துவ சுடுகாடு ஏற்படுத்தும் வகையில் சார் ஆட்சி யரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுமென வட்டாட்சி யர் மல்லிகா தெரிவித்தார். இத னடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.