திருப்பூர் கோயிலில் திருட்டு
திருப்பூர், மே 7 - திருப்பூர், செவந்தாம்பாளையம் மாகாளியம்மன் திருக் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் சனியன்று இரவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருடப்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நல்லூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சாமி சிலையில் இருந்த 12 பவுன் நகை மற்றும் கோவில் அலுவல கத்தில் இருந்த பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த ஜீவா நகரில் வசித்து வந்த வட மாநிலத்தவர் கொள்ளையடித்தது தெரியவந்தது. உடனடியாக தொடர்புடையவரை நல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென் றனர்.
விபத்தில் ஒருவர் பலி
சூலூர், மே 7- திருப்பூர், கல்லங்காடு தோட்டத்தை சேர்ந்த பிரபு ராமசாமி (40) என்பவர், சூலூர் அருகே உள்ள எல்&டி புறவழிச்சாலையில் பாலக்காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பட்டணம் நால் ரோடு அருகே வந்தபோது பிரபு ராமசாமி, முன்னே சென்ற வாகனத்தை ஓவர் டேக் செய்ததாகத் தெரிகிறது. அப்போது எதிரே உயர் ரக லாரி ஒன்று அதிவேக மாக வந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய பிரபு ராம சாமி, நேராக லாரியின் முன்புறத்தில் மோதி யுள்ளார். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரபு உயிரி ழந்தார். இதுகுறித்து போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மே 13ல் உதகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
உதகை, மே 7- மே 13 ஆம் தேதியன்று முதல் 30 ஆம் தேதி வரை உத கையில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற உள்ளதால், சுற் றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல் வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. மே 19 ஆம் தேதியன்று உதகை தாவரவி யல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன. அதன்படி சனியன்று கோத்தகிரி யில் காய்கறி கண்காட்சி தொடங்கியது. இதில் சிறப்பம்சமாக மே 13 ஆம் தேதியன்று முதல் மே 30 ஆம் தேதியன்று வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், மே 20 ஆம் தேதியன்று முதல் மே 30 ஆம் தேதியன்று வரை உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது. கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உதகை நகரின் 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தொடங்கப் பட உள்ளது. இதைத்தொடர்ந்து படிப்படியாக மருத்துவ ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படும். தனியார் நிறு வனம் மூலமாக உதகை, தீட்டுக்கல் மைதானத்தில் ஹெலி காப்டர் சுற்றுலா நடைபெறும். ஒரு முறை ஹெலிகாப்டரில் 6 பேர் செல்லலாம். அங்கி ருந்து 30 முதல் 40 கி.மீட்டர் தூரம் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும். விமான நிறுவன உத்தரவின்படி சுமார் ஆயிரம் அடி உயரம் வரை பறந்து, உதகை நகரை கண்டு ரசிக்கலாம். இதற் கான கட்டணமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை இருக்கலாம். இணையதளம் மூலமாக முன் அனுமதி பெற லாம். தீட்டுக்கல் மைதானத்துக்கு வந்தும் அனுமதி வாங்க லாம். உதகை காலநிலையை பொறுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக மாவட்ட நிர் வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுப்பணி, வனம் உள்ளிட்ட துறைகளில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணமோசடி: போலீசில் மூதாட்டி புகார்
சேலம், மே 7- ஆன்லைன் நிறுவனம் நடத்துவதாக கூறி ரூ.1.75 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 65 வயது மூதாட்டி ஒருவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார ளித்துள்ளார். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமி (65) என்பவர் அவரது மகனுடன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு, உடல்நிலை பாதிப்போடு வந்தார். இதைய டுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் மனுவை கொடுத்தபின் செய்தியாளர்களிடம் லட்சுமி கூறுகை யில், எனது உறவினரான ஆறுமுகம் - ஷாமினி தம்பதியினர், சென்னை முகப்பேறு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் நிறுவனம் நடத்து வதாகக்கூறி, தன்னிடம் ரூ.1.75 கோடி பெற்றுக்கொண்டு, தன்னையும் அதில் பங்குதாரராக சேர்த்து தொழில் தொடங்க உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், இரண்டு வருட காலம் ஆகியும், இதுவரை பெற்றுக்கொண்ட பணத்திற்காக எந்த தொகையும் வழங்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று இருந்ததால் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் எனது மகன் சென்னையில் சந்தித்து பணம் குறித்து கேட்டதற்கு பணம் நட்டமாகிவிட்டது என்றும், பணத்தை திரும்பத்தர இயலாது எனவும் மிரட்டி னார். மேலும், இது குறித்து எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவித்தாலும் பயனில்லை எனவும் கூறியுள்ளனர். எனது உடலில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துள்ளதால், தொடர்ந்து அவரிடம் பணம் குறித்து பேச முடியவில்லை. எனவே, காவல் துறையினர் மேற்கண்ட தம்பதியினர் மீது நடவடிக்கை மேற் கொண்டு, தனது பணத்தை திரும்பப்பெற்று தருமாறு கண் ணீர் மல்க தெரிவித்தார்.
ஒரே நாளில் கஞ்சா விற்ற 10 பேர் கைது
கோவை, மே 7- கோவை மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் வெள்ளி யன்று போலீசார் கஞ்சா விற்பனையை ஒழிக்க தீவிர சோத னையில் ஈடுபட்டனர். ரத்தினபுரி, செல்வபுரம், குனியமுத் தூர், சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி ஆகிய பகுதி களில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடு பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை
முதலமைச்சருக்கு ஊழியர், உதவியாளர் சங்கம் நன்றி
சென்னை, மே 7- அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் கோடைவிடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலை வர் எஎப்.ரத்தினமாலா, பொதுச் செயலாளர் டி.டெய்சி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 32 வருட காலமாக தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து போராட் டம் நடத்தினோம். ஆனால் நிறை வேற்றப்படவில்லை, நாங்கள் காத்திருப்புப் போராட்டம் தொடங் கிய 12 மணி நேரத்தில் பெண்கள் போராடக்கூடாது என்று சொல்லி உடனே அழைத்து பேசி கோரிக்கை யை நிறைவேற்றுங்கள் என ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், இந்த அரசு சமூகநீதி அரசு என்பதையும், பெண்களுக்கான அரசு என்பதை யும் நிரூபித்துள்ளது. எங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முதல்வர் ஆணையிட்ட உடன் பெண்களின் இன்னல்களை புரிந்து கொண்டு போராடும் ஊழி யர்களுக்கு இரவு நேரத்தில் பாது காப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விட்டு காலையில் பேச்சுவார்த்தை நடத்தி உடனே கோடை விடுமுறை இந்தாண்டு வழங்கப்படும் என்று உறுதியளித்து கோடைவிடுமுறை யை 15 நாட்கள் ஊழியர்களுக்கும் உதவியாளர்களுக்கும் வழங்கிய சமூகநலம் மற்றும் பெண்கள் உரி மைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கி றோம்.
அமைச்சர் சொன்னவுடன் உட னடியாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு ஒன்றிய அரசின் அனுமதி யை பெற்று பல்வேறு மாநிலங்க ளில் உள்ள அரசாணைகளை எல் லாம் பார்வையிட்டு உடனடியாக ஊழியர்கள் மற்றும் உதவியாளர் இருவருக்கும் விடுமுறை என அரசாணை வெளியிட்ட சமூக நலத்துறை முதன்மை செயலர் மற் றும் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித்திட்ட குழும இயக்கு நர் மற்றும் உதவி இயக்குநர் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த கோரிக்கை நிறைவேற எங்களுடன் நின்று எங்களது கோரிக்கைகளை எப்போதும் அர சின் கவனத்திற்கு கொண்டு செல்லும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பி னர்கள் சின்னதுரை, நாகைமாலி ஆகியோருக்கும் நன்றி தெரி வித்துக்கொள்கிறோம். மேலும், இது போன்று எங்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான முத்தான மூன்று கோரிக்கை தேர் தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக் குறுதியையயும், முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோர் நிறைவேற்றி தருவார்கள் நம்பிக்கையில் 50 ஆயிரம் ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றோம். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சர் ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு
தருமபுரி, மே 7- பாலக்கோடு பகுதியில் தடை செய்யப் பட்ட ஒரு டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட் டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதி யில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை விவசாய நிலத்தில், குட்டைகள் அமைத்து வளர்த்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கி. சாந்திக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வட்டாட்சியர் ராஜா தலைமையில் அதிகாரி கள் அடங்கிய குழுவினர், பாலக்கோடு பகு தியில் உள்ள விவசாய நிலத்தில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தில் முனு சாமி (39) என்பவரின் விவசாய நிலத்தில், 3 மீன் பண்ணை குட்டைகளில் தடை செய்யப் பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதில் ஒரு குட்டையில் மீன் குஞ்சுகளும், மற்றொரு குட்டையில் சிறிய மீன்களும், 3 ஆவது குட் டையில் விற்பனைக்கு தயாரான நிலையி லும் மீன்கள் என ஒரு டன் கெளுத்தி மீன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதைய டுத்து அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து குட்டைகளில் குழி தோண்டி புதைத்து, பிளிச்சிங் பவுடர் கொட்டி மீன்களை அழித்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் குமரன், மீன்வள சார் ஆய்வாளர் வெங்கடேசன், மேற்பார்வையா ளர் சிங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் உடனி ருந்தனர்.
கட்டுமான பணியின் போது அலட்சியம் பள்ளத்தில் விழுந்து பெண் படுகாயம்
இளம்பிள்ளை, மே 7- காடையாளம்பட்டி சந்தை விரிவாக்க பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் பெண் ஒருவர் விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை அருகே உள்ள காடையாம்பட்டி, 16 வார்டில் வசிப்பவர் மாரியப்பன் (64). இவரது வீட்டின் முன்பு சுமார் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் காடை யாம்பட்டி வாரசந்தை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக மாரியப் பன் வீட்டின் அருகே பள்ளம் தோண்டப்பட் டுள்ளது. ஆனால், அதற்கு பாதுகாப்பாக தடுப்பு அரண் அமைக்காத காரணத்தால், மாரியப்பனின் மனைவி மகாலட்சுமி (57) வீட்டிலிருந்து வெளியே வந்த போது, மண் சறுக்கி பள்ளத்தில் விழுந்தார். இதில், அவ ருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாரியப்பன் கூறுகையில், 16 ஆவது வார்டில் நடைபெறும் இந்த பணி குறித்து ஏன் மக்களிடம் கருத்து கேட்கவில்லை என வார்டு கவுன்சிலர் விஜயாவிடம் கேட்ட போது, அவர் நகராட்சி தலைவரிடம் முறை யிட்டுள்ளார். அதன்பிறகு தலைவர் கோபம டைந்து என் வீட்டு வாசலில் சாக்கடை கால் வாய் மற்றும் குடிநீர் இணைப்பு செல்லாத வாறு ஜேசிபி மூலம் வழிதடத்தை குறுக்கி விட்டார். இதனால் நாங்கள் இதுகுறித்து பல் வேறு அதிகாரிகளிடம் மனு அளித்து முறை யிட்டோம். அதற்கு தலைவர், எங்கு வேண்டு மானாலும் செல்லுங்கள் என கூறிவிட்டு சென் றார். பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் என் மனைவி தலை காயத் தால் 15 தையல் போடப்பட்டு, தற்போது உயிருக்கு போராடி வருகிறார். எனவே, இது குறித்து அலட்சியமாக இருந்த சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதுகுறித்து இடங்கணசாலை நகராட்சி தலைவரிடம் கேட்டபோது, அந்தப்பெண் வீட் டில் இருந்து வெளியே வரும் பொழுது படி யில் தவறி விழுந்து விட்டார் என அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத் துக்கும், நகராட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, என கூறினார்.
நகை பறிப்பு
கோவை, மே 7- கோவை, செல்வபுரம், கருப்பையா நகரை சேர்ந்த வர் லட்சுமி (57). இவர் கடை வீதி பேருந்து நிறுத்தத்தி லிருந்து பேருந்தில் செல்வ புரம் புறப்பட்டார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர், லட்சுமி கழுத்திலி ருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இத னால், அதிர்ச்சியடைந்த லட் சுமி இதுகுறித்து செல்வ புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் நகையை திருடிச் சென்ற நபரை தேடி வருகின் றனர்.