districts

img

வெள்ளையர் படையை தோற்கடித்த தீரன் சின்னமலை

சின்னமலை  கும்மி

கட்டுத்தடிக்காரர் முன்னெடுக்க உடன் கருப்பு சேர்வையும் பின் நடக்க வட்டப் பொட்டுக்கார சின்ன மலையதோ வார சளரியம் பாருங்கடி பட்டத்துக்கத்தி பளபளவெனச் செல்லும் பாளையக்காரர்கள் முன் நடக்க வெட்டுந் துரை மகன் சின்ன மலை வரும் வேடிக்கை தன்னையும் பாருங்கடி சின்னமலை வெடிகுண்டுக்கு தப்பியே சீமை படையினரின் குதிரை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக குள்ளநரி போல ஓடும் ஒய்யாரத்தை பாருங்கடி கொங்கினை யாளப் பிறந்தவனாம் – செழுங் கோவைக்கோ னாகச் சிறந்தவனாம் சிங்கமென வெள்ளைக் கும்பலில் பாய்ந்திடும் சின்ன மலைபுகழ் பாடிடுவோம். காலைப்பிடித்து நிலத்தடிப்பான் – கருங் காகம் கழுகுக்கு இறையிடுவான் ஆலைக் கரும்பு போல் வெள்ளைப் படையை அழித்து களிப்பானாம் சின்னமலை. (இப்போது வள் ளிக்கும்மி பேசுபொரு ளாக இருக்கிற சூழலில், இந்திய விடுதலை போராட் டத்தில் தீரன் சின்ன மலையின் வீரத்தை  பறைசாற்றும் சின்ன மலை கும்மி அன்று பரவலாக மக்களிடம் பாடி ஆடப்பட்டது)

இந்திய விடுதலைப் போராட்டம் பல் வேறு தியாகங்கள், சாகசங்கள் நிரம்பிய ஒரு மகத்தான வரலாறு ஆகும்.  இதில், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியாக தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்ற ஆரம்ப காலத்தில் வெள்ளையர் படையை மூன்று முறை தோற்கடித்த பெருமைக்குச் சொந்தக்காரர் தீரன் சின்னமலை. காங்கேயம் அருகே பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் ரத்தினச் சர்க்கரை, பெரியாத் தாள் தம்பதியின் இரண்டாவது மகனாக 1756 இல் பிறந்தவர் தீர்த்தகிரி. வரலாற்றில் தீரன் சின்னமலை என்ற பெயர் பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் அவர். மேலப்பாளையத்தில் வாழ்ந்து வந்த அவர், மைசூர் மன்னர் மரபினர் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தனர். காங்கேய நாட்டு வரி வசூல் பணம் சங்ககிரிக்கு சென்று அங்கிருந்து மைசூர் செல்லும். ஒருமுறை தீர்த்தகிரி சகோத ரர்கள் மூவரும் காட்டு வழி சென்றபோது தாரா புரம் கெடி ஆட்கள் சங்ககிரிக்கு வரிப்பணத்தை எடுத்துச் சென்றனர். வழியில் சந்தித்த தீர்த்த கிரி சகோதரர்கள், ‘கொங்கு நாட்டுப் பணம்  மைசூருக்கு ஏன் செல்ல வேண்டும் என்று பறித் துக்கொண்டு விரட்டியடித்தனர். வரிப்பணத்தை பறித்தது யார் என்று கேட்டால் என்ன சொல்ல? என்று அவர்கள் கேட்ட போது, “சிவன்மலைக் கும், சென்னிமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை என்று கூறு!” என்று பதில் கூறி னார் தீர்த்தகிரி. அது முதல் தீர்த்தகிரி சின்ன மலை என்று பிரபலமானார்.

திப்பு சுல்தான் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான போரை தீவிர படுத்திய போது அவ ரது படைக்கு வீரர்கள் தேவைப்பட்டனர். சின்ன மலையின் தூண்டுதலால் கொங்கு வீரர்கள் பலர் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்தனர். பயிற்சி பெற்று பணிபுரிந்தனர்.  பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் களை அழைத்துக் கொண்டு காட்டு வழியாக மைசூர் சென்றடைந்தார் சின்னமலை. அங்கு ஜாக்கோபின் கழகம் எனப்படும் பிரெஞ்சு விடு தலை மன்ற படைவீரர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்று கொங்கு படை தனியாக அமைந்தது. தீரன் சின்னமலையுடன் இணைந்து இருந்த கருப்ப சேர்வை பிரஞ்சு மொழியை நன்கு கற்று தேர்ந்தார்.  திப்புவிற்காக நெப்போலியனிடம் சென்ற தூதுக்குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார். வெள்ளையர்களுக்கு எதிரான நான்காம் மைசூர் போரில் திப்புவின் படையுடன் இணைந்து கொங்கு படையினரும் போரிட்ட னர். 1799இல் அந்தப் போரில் திப்பு வீரமரணம் அடைந்ததற்குப் பிறகு சின்னமலை தனது படை யினருடன் ஊர் திரும்பினார். அதன் பிறகு ஓடா  நிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக்  கட்டி சின்னமலை படைப்பலத்தை பெருக்கினார். கோவைக்கும் சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி கிழக்கிந்திய கம்பெனி வசம் இல்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவரு டைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலும் அப் பகுதி இருந்தது.  கோவை கோட்டை வெள்ளையர்கள் வசம் இருந்தது.1800 ஜூன் 3ஆம் தேதி மொகரம் நாளில் அந்தக் கோட்டையை கைப்பற்ற சின்ன மலை தலைமையில் புரட்சியாளர்கள் திட்ட மிட்டனர். எனினும் அதை முன் உணர்ந்த வெள்ளையர்கள் அதை தடுத்து நிறுத்தி 42 வீரர்களை கைது செய்து அதே ஆண்டு ஜூன்  எட்டாம் தேதி தூக்கிலிட்டனர். இதையடுத்து வெள்ளையர்கள் சின்ன மலையிடம் தூது அனுப்பினர். வெள்ளையர் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டால், அவரையே அப்பகுதிக்கு தலைவர் ஆக்குவதாகவும், வரிப் பணத்தில் பத்தில் மூன்று பங்கை மட்டும் வெள்ளையர்களுக்கு கொடுத்தால் போதும் என்றும் ஆசை காட்டி அவரை இழுக்க முயன்ற னர்.

ஆனால் சின்னமலை அதற்கு பணிய வில்லை. இதையடுத்து சின்னமலையை ஒழித் துக் கட்டுவது என்று கிழக்கிந்திய கம்பெனி யார் முடிவு செய்தனர். அதற்காக 1801இல் காவிரிக் கரையிலும், 1802 இல் ஓடாநிலையிலும், 1804இல் அரச்சலூரி லும் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று போர்களி லும் வெள்ளையர் படை சின்னமலையிடம் தோற்றுப்போனது. ஓடாநிலைப் போரில் கம் பெனி தளபதி மேக்ஸ்வெல் கொல்லப்பட்டான். அரச்சலூரில் கம்பெனியாரின் குதிரைப்ப டையை குண்டு வீசி நிலைகுலைய வைத்து பின்வாங்கி ஓடும்படி செய்தார். எனினும் வெள்ளையர்களின் சூழ்ச்சியால், சமையல்காரனால் காட்டிக் கொடுக்கப்பட்ட சின்னமலை சகோதரர்கள் கைது செய்யப் பட்டு 1805 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சங்ககிரிக்கு கொண்டு வரப்பட்டு தூக்கிலிடப் பட்டனர்.  உயர்ந்த விடுதலை லட்சியத்துடன் வெள்ளையர்களுக்கு எதிராக திப்புசுல்தான் உடன் இணைந்து பயணித்து, சுயாதிபத்தி யத்தை நிலைநிறுத்த வீரம் செறிந்த போராட் டத்தை நடத்தி தியாகம் செய்தவர் தீரன் சின்ன மலை. என்றென்றும் அவர் நினைவுகள் விடு தலையின் மகத்துவத்தை உணர்த்தி எழுச்சி ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். -வே.தூயவன்