districts

img

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை

கோவை, ஜூன் 3- தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணியே வெல்லும் என தமிழக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜ நம்பிக்கை தெரிவித்தார். கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலை ஞரின் திருவுருவப் படத்திற்கு அமைச் சர் டிஆர்பி.ராஜா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் டிஆர்பி. ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும், கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒட்டுமொத்த தமிழகம் கலைஞரை கொண்டாடி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப் படுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் கலைஞர் தான். ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றி யை மட்டுமே கண்ட தலைவர் கலைஞர் தான். இன்றைய நாளில் அவரை கொண் டாடி வருகிறோம். நமது முதலமைச் சர் தமிழகத்திற்கு மூன்றே ஆண்டுகளில் மகத்தான சாதனைகள், மகத்தான நலத் திட்டங்களை பொது மக்களுக்கு, தாய் மார்களுக்கு, இளைஞர்களுக்கு அற்பு தமான நலத்திட்டங்களை கொடுத்து வருகிறார். மகத்தான வெற்றியை செவ் வாயன்று (இன்று) நாற்பது தொகுதிக ளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும். இதனை மக்கள் கொடுப்பார் கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக் கும். தமிழகத்தில் மகத்தான வளர்ச்சி யை அனைத்து துறைகளிலும் முதல மைச்சர் செய்து காட்டுவார். பல மடங்கு திட்டம் அற்புதமான செய்து காட்டுவார். கோவைக்கு தேர் தல் வாக்குறுதியில் சொல்லியது போல, மிகப்பெரிய வளர்ச்சி, சிறு, குறு தொழில்க ளில் பெரிய விடியல் அடுத்த கட்டமாக காத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும் என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், பொருளாளர் எஸ்எம்.முருகன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி மற் றும் வார்டு செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

;