districts

img

ரேசன் அரிசி பறிமுதல்

மேட்டுப்பாளையம், ஆக.20- மேட்டுப்பாளையம் பகுதியில் குடோனில் பதுக்கி வைக் கப்பட்டிருந்த சுமார் 4 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு  பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு கிடைத்த  தகவல் அடிப்படையில், காரமடை சின்ன தொட்டிபாளையத் தில், துணை கண்காணிப்பாளர் மாரிமுத்து உத்தரவின் பேரில் ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ் கண்ணன், உதவி ஆய்வா ளர் செல்வம் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அந்த குடோனில் சுமார் 4 ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைய டுத்து குடோனில் இருந்த ஆறு பேரை உணவு பாதுகாப்பு துறையினர் கைது செய்து, அவர்களிடம் சுமார் 4 ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசி, அவர்கள் பயன்படுத்தி வந்த 8 இரு சக்கர வாகனங்கள், மினி வேன் ஒன்று மற்றும் இரண்டு கார்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.