ஈரோடு, ஆக.11- நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் தீர்ப்பு கிடைத்தவுடன் சுகா தார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப் பப்படும் என மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை, பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவில் நவீன வசதிகளு டன் சிகிச்சை பெற கட்டணப் படுக் கைகள் கொண்ட அறையினை மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்து சாமி ஆகியோர் ஞாயிறன்று திறந்து வைத்தனர். இதன்பின் மா.சுப்பிர மணியம் செய்தியாளர்களிடம் பேசு கையில், எல்லா மருத்துவமனைகளி லும் மருத்துவ சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித் துள்ளது. அந்த வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறைகள் ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பட்ஜெட்டில் 16 இடங்களில் இது போன்ற கட்டணப் படுக்கை அறை வசதி ஏற்படுத்தப்படும் என அறி விக்கப்பட்டது. கோவை, மதுரை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்க ளில் இந்த கட்டணப் படுக்கை அறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், 20 படுக்கை அறைகள் திறக்கப்பட்டுள் ளது. மேலும், அரசு மருத்துவமனை யில் கேத் லேப் வசதி ஏற்படுத்த ரூ.12 கோடி செலவாகும். கோவை, சேலத் தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஈரோட்டில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 1021 மருத்துவப் பணியிடங்கள், 927 செவிலியர் பணியிடங்கள் வெளிப் படைத்தன்மையுடன் நிரப்பப்பட் டன. 986 மருந்தாளுநர் பணியிடங் களை நிரப்ப கலந்தாய்வு நடை பெற உள்ளது. 2253 மருத்துவர் பணி யிடங்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி யன்று வரை மனுக்கள் பெறப்பட் டது. அதற்கான கேள்விகள் தயாரிக் கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு பிறகு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவார்கள். 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் நிரப்பு வது தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள் ளது. வழக்கின் தீர்ப்பு கிடைத்தவுடன் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், 2250 கிராம சுகாதார செவி லியர்கள் நிரப்புவதிலும் வழக்குகள் உள்ளது. வழக்கு முடிந்தவுடன் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு சுப்பிரமணியம் தெரிவித் தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங் களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தி யூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.