districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

திருமணிமுத்தாற்றில் கலக்கும் சாயக்கழிவுநீர் செத்து மிதக்கும் மீன்களால் கடும் துர்நாற்றம்

நாமக்கல், ஜன.8- திருமணிமுத்தாற்றில் கலக்கும் சாயக்கழிவுநீர் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால், ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இத னால் கடும் துர்நாற்றம் வீசுகிறதென, அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு மலையடிவாரத்தில் இருந்து திருமணிமுத்தாறு தொடங்கி சேலம் நகர்  பகுதி, ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, எலச்சிபாளை யம், பரமத்திவேலூர் வழியாக சென்று காவிரி ஆற்றில்  கலக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், வெண் ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதியம்பட்டி வழியாக  திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் சாக்கடை மற்றும் சாயக்கழிவு நீர் கலப்பதால் கருநிறத்துடனும், நுரையுடனும் நீரானது செல்கிறது. இதனால் பல்லாயி ரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் அவல நிலை ஏற் பட்டுள்ளது. இதுகுறித்த அப்பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் கூறுகையில், கடந்த 4 நாட்களாக  திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுநீர் மற்றும் சேகோ தொழிற்சாலை கழிவுநீர் திறந்து விடப்படுவதால் நுரை யுடன் ஆற்றுநீர் செல்கிறது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்ட நிலையில், அழைப்பை ஏற்கவில்லை. எனவே, செத்து மிதக்கும் மீன்களை விரைந்து அகற்ற வேண்டும். ஆற்றில் கழிவு நீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கிடுக புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறப்பை நீட்டிக்க வலியுறுத்தல்

உடுமலை, ஜன.8- மடத்துக்குளம் பகுதி விவசாயி களின் நீண்ட நாள் கோரிக்கை யான அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலையை புதுப்பிக்க நிதி  ஒதுக்க வேண்டும். புதிய ஆயக் கட்டு பகுதியில் தண்ணீரை திறப்பை ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்க வேண் டும், என விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க தேவையான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்து, கடந்த இரண்டு ஆண்டுகள் மூடப் பட்டுள்ள ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின் றனர்.  மடத்துக்குளம் தாலுகா, கிருஷ் ணாபுரம் பகுதியில் 1960 ஆம்  ஆண்டு அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலை அமைக்கப்பட்டது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அரவை பருவமாகும். தொடர்ந்து 60 ஆண்டுகளை கடந்து இயங்கும் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால், ஆலையின் உற்பத்தி பாதிக்கப் பட்டு, ஆலையை தொடர்ந்து இயக்க முடியாமல் நிதி நெருக்கடி ஏற்பட் டது. புதிய இயந்திரங்களை பொருத்தி ஆலையை புதுப்பிக்கா ததால், தொழிலாளர்களுக்கு சீராக சம்பளம் வழங்க முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலை  மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின்  முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த தமிழக அரசு சுமார் ரூ.80 கோடி நிதி ஒதுக்க வேண் டும். அதேபோல், மடத்துக்குளம் தாலுகாவில் நடவு செய்து கருகிய நெல் பயிர்களுக்கு இழப்பீடு கோரி  பல கட்ட போராட்டங்கள் நடத்தி யும், இதுவரை நிவாரணம் வழங்கப் படவில்லை. உடனடியாக பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார ணம் வழங்க வேண்டும். மேலும், நடப்பாண்டில் அமராவதி அணை  முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதி யில் கருகிய நெற்பயிர்கள் மீண்டும் நடவு செய்யப்பட்டுள்ளதை கருத் தில் கொண்டு பயிர்களை காப் பாற்ற மார்ச் இறுதி வரை வழங்கப் பட உள்ள தண்ணீரை, ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்க வேண்டும், என் றனர்.

பொங்கல் கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரம்

சேலம், ஜன.8- எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் கரும்பு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கோனேரிப் பட்டி உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதி களில், விவசாயிகள் அதிகளவில் செங் கரும்பினைப் பயிரிட்டுள்ளனர். நல்ல மண் வளமும், நீர் வளமும் நிறைந்த இப்பகுதி யில் விளையும் கரும்புகள் மிகுந்த சுவை யுடன் இருப்பதால், இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தருமபுரி உள்ளிட்ட மாநி லத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்ப னைக்காக அனுப்பப்படுகின்றன. மேலும், மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய் யப்படும் கரும்புகள் புனே, சூரத், ஹைதரா பாத் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விற்ப னைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. காவிரி பாசனப் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக் கும் அதிகமான பரப்பளவில் கரும்புகள் பயிரி டப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அர சின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கு வதற்காக சேலம், நாமக்கல், ஈரோடு உள் ளிட்ட மாவட்ட பகுதியைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அலுவலர்கள் இப்பகுதியில் முகா மிட்டு, விவசாயிகளிடமிருந்து கரும்பினை பெருமளவில் மொத்த கொள்முதல் செய்து வருகின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப் பிற்காக மொத்தமாக கொள்முதல் செய்யப் பட்டுள்ள செங்கரும்புகள் தற்போது அறு வடை செய்யப்பட்டு, வெளி மாவட்டங்க ளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்  அடைந்துள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள் 20 கரும்பு கள் கொண்ட ஒரு கட்டு ரூ.380 முதல் ரூ.420 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங் கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இப்பகுதியில் கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பீப் பிரியாணி விற்ககூடாதாம்! பாஜக நிர்வாகி மிரட்டல் வீடியோ வைரல்

கோவை, ஜன.8- வடமாநிலங்களைப்போல தமிழகத்தி லும் பாஜக பரிவாராங்கள் பீப் பிரியாணியை வைத்து மோதல் போக்கை உருவாக்க முயல்வது முற்போக்காளர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை, கணபதி அடுத்த உடையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி,  ஆபிதா என்பவர்கள் தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு  தங்களுக்கு தெரிந்த பீப் பிரியாணி செய்யும் தொழிலை தொடங்கி நடத்தி வந் துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, மாநகர் மாவட்ட செய லாளர் (பாஜக ஓ.பி.சி அணி) மாட்டு இறைச்சி  பிரியாணி விற்க வேண்டாம் என தொடர்ந்து  மிரட்டி வந்துள்ளார். பாஜக நிர்வாகி மிரட்டும்  வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில் இங்கு மாட்டிறைச்சி விற்கக் கூடாது. யாரைக் கேட்டு விற்பனை செய்து வருகிறீர்கள் என கடைக்காரை மிரட்டுவதும், அதற்கு அந்த கடையில் உள்ள பெண்மணி, எங்களுக்கு  தெரிந்த தொழிலை செய்கிறோம், உங்களை  வற்புறுத்தி எதையும் சாப்பிடச்சொல்ல வில்லை. விரும்புகிறவர்கள் வந்து சாப்பிடு கிறார்கள் உங்களுக்கு என்ன வந்தது என நியாயம் கேட்கிறார். இவை அணைத்தும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், துடியலூர் போலீசார் சம்பவம் குறித்து நேரில் விசார ணையை மேற்கொண்டனர். இந்நிலையில், அங்கிருந்த கடைகள் அனைத்தும் அந்தப் பகுதியில் இருந்து மாற்றி வேறு ஒரு இடத்தில் தள்ளி வைக்க போலீ சார் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலை யில் அபிதாவும் ரவியும் கடையை புதிதாக வேறு ஒரு இடத்தில் வைத்து விற்பனை தொடங்கி உள்ளனர். வாழ்வாதாரத்திற்காக ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கி எங்க ளுக்கு தெரிந்த தொழிலை தொடங்கியுள் ளோம். ஆனாலும் அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மலைப்பகுதி பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அறிவுறுத்தல்

மலைப்பகுதி பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அறிவுறுத்தல் தருமபுரி, ஜன.8- தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிக ரிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவு றுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், ஊரகப்பகுதி யில் உள்ள 73 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இணையவழி ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் கி.சாந்தி பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்  குறைந்த பள்ளிகள், மலைப்பகுதி, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு உரிய சிறப்பு பயிற்சிகள் வழங்கி, மாதிரி வினாத்தாள் தயாரித்து, தேர்வு வைத்து, தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் 8 ஆம் வகுப்பிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டத் தேர்வு, 9 ஆம் வகுப்பிற்கான ஊரக திறனாய்வு தேர்வு, 10 ஆம் வகுப்பிற்கான தமிழ்நாடு முதல்வர் திற னாய்வு தேர்வு, 11 ஆம் வகுப்பிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வுகளில் மாநில அளவில் தருமபுரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது, என்றார்.

கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்திடுக

முத்தரப்பு கூட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் வலியுறுத்தல்

நாமக்கல், ஜன.8- கரும்பு போன்று, மரவள்ளிக் கிழங்கிற்கும் கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என நாமக்கல் லில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மரவள்ளி  கிழங்கு விவசாயிகள், ஆலை உரி மையாளர்கள், மாவட்ட நிர்வாகம் உடனான முத்தரப்பு கூட்டம் செவ் வாயன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் முன்னிலை வகித்து பேசுகையில், தமிழ்நாட்டில் ஜவ்வ ரிசியின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற் கட்டமாக முதலமைச்சரின் காலை  உணவு திட்டத்தில் ஜவ்வரிசி பயன் படுத்த முதல்வரின் கவனத்திற்கு  கொண்டு சென்று நடவடிக்கை எடுக் கப்படும். மரவள்ளிக்கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவும், கூட்டு றவு முறையில் ஜவ்வரிசி ஆலை யினை தொடங்கவும், மரவள்ளி யிலிருந்து எத்தனால் உற்பத்தி செய் திட அரசுக்கு முன்மொழிவு அனுப் பிடவும் உரிய நடவடிக்கை எடுக் கப்படும். ஜவ்வரிசியின் தேவை களை அதிகரிக்கும் பட்சத்தில் விவ சாயிகளுக்கு உரிய விலை கிடைக் கும். அனைத்து சேகோ பொருட்க ளும் சேகோ சர்வ் மூலமாக கொள் முதல் செய்வதை உறுதி செய்வதற் காக மாவட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசிக்கு ஒரே மாதிரி யான ஜிஎஸ்டி நிர்ணயம் செய்ய  ஜனவரி மாத இறுதியில் நடைபெ றும் நிதிக்கலந்தாய்வுக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி குழுவிற்கு பரிந் துரை செய்யப்படும். மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் துணை நிலையம் நாமக்கல் மாவட்டத்தில் நிறுவுவதற்கு வழிவகை செய்யப் படும், என்றார். மேலும், நாமக்கல் மாவட்டத் தில் மரவள்ளிக்கிழங்கு விலை ஏற் றத்தாழ்வை தடுக்கும் விதமாக கரும்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுவது போல், மரவள்ளிக் கிழங்கிற்கும் கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். மரவள்ளிக்கிழங்கினை மதிப் புக் கூட்டப்பட்ட பொருளாக மாற் றம் செய்து விற்பனையை அதிகப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். மரவள்ளியில் செம்பேன்,  வெள்ளைப்பேன் பூச்சித்தாக்கு தல் அதிகமாக இருப்பதால் விலை வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். புயல் மழையினால் பாதிக்கப்பட்ட மரவள்ளி சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும். ஒரு டன் மர வள்ளிக்கிழங்கிற்கு 50 கிலோ மண்  கழிவு செய்யப்படுவதை மறுபரி சீலினை செய்ய வேண்டும். நாமக் கல் மாவட்டத்தினை தேசிய தோட் டக்கலை இயக்கத்தில் சேர்த்திட பரிந்துரை செய்ய வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர். ‘அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்’ என மாவட்ட ஆட்சியர் ச. உமா தெரிவித்தார். இந்நிகழ்ச்சி யில் சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதி வாளர் க.பா.அருளரசு, வேளாண் இணை இயக்குநர் கலைசெல்வி, துணை இயக்குநர்கள் புவனேஸ் வரி, நாசர், ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் வெங்கடாசலம், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், விவசாய சங்க  பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வட்டமலைக்கரை ஓடை  அணைக்கு தண்ணீர் திறப்பு

உடுமலை, ஜன.8 - திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள வட்ட மலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திற்கு திருமூர்த்தி அணையில்  இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் ஜன.18 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தண்ணீர் விடப்படுவதாக பிஏபி  நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடுமலை திருமூர்த்தி அணையின் மூலம் பிஏபி பாசன திட் டம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், காங்கே யம் தாலுகா உத்தமபாளையம் கிராமத்தில் உள்ள வட்டம லைக்கரை ஓடை நீர்தேக்கத்திற்கு குடிநீர் தேவைக்காக தண் ணீர் திறந்துவிட பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த னர்.  இதனை ஏற்று தமிழக அரசு திருமூர்த்தி அணையிலி ருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் கள்ளிப்பாளை யம் நீர் வெளிப் போக்கி வழியாக வட்டமலைக் கரை ஓடை நீர் தேக்கத்திற்கு வரும் 18 ஆம் தேதி வரை மொத்தம் 10 நாட்க ளுக்கு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவை களுக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. புதனன்று  காலை நிலவரப்படி 60 அடி உயரமுள்ள  திருமூர்த்தி அணை யில் நீர்மட்டம் 49.47 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 41 கன அடியாகவும் உள்ளது.

திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நாளை முதல் 502 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பூர், ஜன.8- திருப்பூர் மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து பொங்கல்  திருநாளை முன்னிட்டு, வெளியூர்களுக்கு செல்ல ஜனவரி 10ஆம் தேதி முதல் 520 சிறப்பு  பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த ஏற் பாடுகள் குறித்து போக்குவரத்து கழக அலுவ லர்கள் சனியன்று பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.   தொழில் நகரமான திருப்பூரில் பின்ன லாடை உற்பத்தி மற்றும் அதை சார்ந்த நிறு வனங்களில் பல்வேறு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வரும் 14 ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு வெளி மாவட்டத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 6  நாட்கள் அரசு  தொடர் விடுமுறை விடப்பட்டுள் ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும்  வரும் 10ஆம் தேதி முதல் 14 ஆயிரத்து  104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் மூன்று பேருந்து நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. கோயில் வழி பேருந்து நிலையத்தில் இருந்து தென்  மாவட்டங்களான மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதிய  பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சா வூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை உள் ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக் கப்படுகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு  வெளி மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு 502 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் பேருந்து நிலையத்திலிருந்து, ஈரோடு, சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் 209 நடைகளுடன், கூடுதலாக 112 நடை பேருந்துகள் இயக்கப்படும். கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, செங் கோட்டை, நாகர்கோவில், திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் 231  நடைகளுடன் கூடுதலாக 223 நடை இயக்கப்ப டும். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் 137  நடைகளுடன், கூடுதலாக 167 நடை பேருந்து கள் இயக்கப்படும். இதில், தென் மாவட்டங்க ளான மதுரை திருச்செந்தூர் தூத்துக்குடி நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ள நிலையில் சனியன்று 11 ஆம் தேதி  இரவு முதல் அதிக அளவு தொழிலாளர்கள் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. மீண்டும் சொந்த ஊர்களில் இருந்து திருப்பூர் திரும்பி  வர ஏதுவாக தேவையான சிறப்பு பேருந்துக ளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் பேருந்து நிலையங்களில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற் கொள்வது குறித்து போக்குவரத்து கழக அலு வலர்கள் மற்றும் போலீசார் புதனன்று ஆய்வு  மேற்கொண்டனர்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.8 - மடத்துக்குளம் பகுதி விவசாயி களின் நீண்டநாள் கோரிக்கையான அமராவதி சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும். புதிய ஆயக்கட்டு பகுதியில் மார்ச்  இறுதி வரை வழங்கப்பட உள்ள தண் ணீரை ஏப்ரல் இறுதி வரை நீட்டித்து  வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க தேவையான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்து கடந்த இரண்டு ஆண்டுகள் மூடப் பட்டு உள்ள ஆலையை திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை. இது குறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மடத்துக்குளம்  தாலுகா செயலாளர் எம்.எம்.வீரப் பன் கூறியதாவது, திருப்பூர் மாவட் டம் மடத்துக்குளம் தாலுகா கிருஷ் ணாபுரம் பகுதியில்  1960 ஆம் ஆண்டு  அமராவதி கூட்டுறவு சர்க்கரை  ஆலை அமைக்கப்பட்டது. அன்றைய  தொழில் நுட்பத்தின்படி இயந்தி ரங்கள் பொருத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு 1,250 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டதாக இயங்கத் தொடங்கியது. பின்னர்  1994 ஆம் ஆண்டு இந்த ஆலையின் கழிவுகளில் இருந்து எரி சாராயம்  தயாரிக்கும் ஆலையும் தொடங்கப் பட்டது. இந்த ஆலையில் ஆண்டுதோ றும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அரவை பருவமாகும். தொடர்ந்து 60 ஆண்டுகளை கடந்து  இயங்கும் இயந்திரங்களில் அடிக் கடி பழுது ஏற்படுவதால், ஆலையின்  உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஆலையை தொடர்ந்து இயக்க முடியாமல் நிதி  நெருக்கடி ஏற்பட்டது. புதிய இயந்தி ரங்களை பொருத்தி ஆலையை புதுப் பிக்காததால், தொழிலாளர்களுக்கு சீராக சம்பளம் வழங்க முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலை  மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த தமிழக அரசு சுமார் ரூ. 80 கோடி நிதி ஒதுக்க  வேண்டும். அதேபோல், மடத்துக்குளம் தாலுகாவில் நடவு செய்து கருகிய நெல் பயிர்களுக்கு இழப்பீடு கோரி  பல கட்ட போராட்டங்கள் நடத்தியும்  இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு நிவாரணம் வழங்கப்பட வில்லை. உடனடியாக பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும்,  நடப்பு  ஆண்டு அமராவதி அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. அம ராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில் கருகிய நெற்பயிர்கள் மீண்டும் நடவு  செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பயிர்களை காப்பாற்ற மார்ச் இறுதி வரை வழங்கப்பட உள்ள தண்ணீரை ஏப்ரல் இறுதி வரை  நீட்டித்து வழங்க வேண்டும் என்று கூறினார்.

முதலிடம் பெறும் பள்ளிகளுக்கு  பரிசுகள் வழங்க கோரிக்கை

உடுமலை, ஜன.8- பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசு வழங்க முன்னாள் ராணுவ வீரர் நலச்  சங்க கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம் உடுமலை யில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.  இதில் வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை சிறப்பாக  கொண்டாட வேண்டும். பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெறும்  பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்  வழங்குவதைப் போன்று, இந்த ஆண்டும் வழங்க வேண்டும்.  மேலும், உறுப்பினர்களுக்கான சீருடை சந்தா மற்றும் சிஎஸ்டி  கேண்டீன் திருப்பூரில் கொண்டு வர ஏற்பாடுகள் செய்வது  குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில்  உடுமலையை சேர்ந்த லெப்டினன்ட்  கர்னல் செந்தில்குமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட் டது. நிறைவாக நாயப் சுபேதார் நடராஜ் நன்றி கூறினார்.

நாட்டுப்புற கலை மீட்பு திருவிழா

நாட்டுப்புற கலை மீட்பு திருவிழா சேலம், ஜன.8- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  நாட்டுப்புற கலை மீட்பு திருவிழாவில், 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்ட னர். சேலம் பெரியார் பல்கலைக்கழகமும், சாதிப்போர் தமிழ் சங்கமும் இணைந்து, நாட்டுப்புற கலை மீட்பு  திருவிழாவை இரண்டு நாட்களாக நடத்தி வருகின்ற னர். இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் கலந்து  கொண்டனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம்,  பறையாட்டம், தப்பாட்டம், காவடி ஆட்டம், சிலம்பாட் டம், பம்பை ஆட்டம், கரகாட்டம், தெரு கூத்து, தேவதை  ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்தனர். கிராமிய கலைகள் அழிந்து வரும் நிலையில், தமிழக அரசின் சார்பில் நடத்தப் படும் அரசு விழாக்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளை  நடத்தி, கிராமிய கலைஞர்களை அரசு பாதுகாக்க வேண்டும். தற்போது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கிரா மிய கலைஞர்கள் பங்கேற்க கமிஷன் வாங்கப்படும் நிலை உள்ளது. அதனை களைந்து, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும், என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழக நூலக பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹீமோபிலியா வால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 37.86  லட்சம் மதிப்பில்  பிபா ஊசி

ஹீமோபிலியா வால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 37.86  லட்சம் மதிப்பில்  பிபா ஊசி சேலம், ஜன.8- சேலம் அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா வால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.37,86,501 மதிப் பிலான, பிபா ஊசி செலுத்தி காப்பாற்றினர்.  இதுகுறித்து சேலம் அரசு குமாரமங்கலம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓமலூர் அருகே  உள்ள மாரகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த வெங்க டேஷ் என்பவரின் மகன் சூர்யா (17). இவர் ஹீமோபி லியா என்னும் ரத்தம் உறையாமை நோயினால் பாதிக் கப்பட்டுள்ளார். இவர் கண் சிவந்து வீக்கத்துடன் சேலம்  அரசு மருத்துவமனை கண் மருத்துவப்பிரிவுக்கு கடந்த  மாதம் சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடது கண் வீக்கம், கண் இமைகளில்  வீக்கம், கருவிழி முழுவதும் தழும்பு, வெண் படலம்  மெலிந்து அதன் வழியாக உள்ளிருக்கும் தசைகள்  துருத்தி கொண்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டறிந் தனர். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது சவாலானது என்றாலும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், வெண் படலம் கிழிந்து அதன் வழியாக உள்ளிருக்கும் தசை களில் இருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டு, அதனால் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்ப டும் வாய்ப்புள்ளது. மேலும், வெளியே வரும் தசைக ளால் பார்வையுள்ள மற்றொரு கண்ணும் கிருமி தொற்றி னால் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பிபா என் னும் மருந்தை செலுத்தி ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி அறுவை சிகிச்சை தொடங்கலாம் என ரத்தவியலாளர் மூலம் தெரிந்துகொண்ட பிறகு, சிறுவனுக்கு அறுவை  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கண் குணமானதும், சிறுவனை வீட்டுக்குச் செல்ல அனுமதித்தோம். இந்த  சிறுவனுக்கு ரூ.37,86,501 மதிப்பில் பிபா ஊசி செலுத்தப்பட்டுள்ளது, என்றார்.

விற்பனை ரசீது கட்டாயம்‌பெற வேண்டும்‌ விதை ஆய்வு இயக்குநர் ‌அறிவுரை

விற்பனை ரசீது கட்டாயம்‌பெற வேண்டும்‌ விதை ஆய்வு இயக்குநர் ‌அறிவுரை உதகை, ஜன.8- நீலகிரி மாவட்டத்தில் ‌மலை காய்கறிகள் ‌பயிர் ‌செய்ய தேவையான விதைகள் ‌மற்றும்‌ நாற்றுகள்‌ வாங் கும்‌போது கட்டாயமாக விற்பனை ரசீதை விவசாயி கள் ‌வாங்க வேண்டும் ‌என விதை ஆய்வு துணை இயக்கு நர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் ‌சு. ரேவதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதா வது, நீலகிரி மாவட்டத்தில் ‌உதகை, கோத்தகிரி, குன் னூர் ‌மற்றும் ‌கூடலூர்‌ வட்டாரங்களில் ‌மலைகாய்கறி களை விவசாயிகள் ‌அதிகளவில் ‌சாகுபடி செய்கின்ற னர்‌. தற்போது பருவ காலம் ‌தொடங்க உள்ளதால் ‌கேரட்‌, பீட்ரூட்‌, உருளைக்கிழங்கு மற்றும் ‌பிற காய்கறி பயிர் களை சாகுபடி செய்ய தொடங்கும்‌ நிலை உள்ளது. சாகு படி செய்வதற்கு தேவையான மலைகாய்கறி பயிர்க ளின் ‌விதைகள் ‌விதை உரிமம் ‌பெற்ற கடைகளில்‌ விற்கப் பட்டு வருகிறது.  விவசாயிகள் ‌தேவையான விதைகளை விதை உரி மம்‌பெற்ற கடைகளில்‌ மட்டுமே வாங்க வேண்டும்‌. விதை களை வாங்கும்‌போது அதற்கான முளைப்புத்‌திறன் ‌சான்று உள்ளதா என விசாரித்து உறுதி செய்து வாங்க  வேண்டும்‌. விதைகள் ‌வாங்கும்‌போது கட்டாயமாக விற் பனை ரசீது பெற்றுக்‌கொள்ள வேண்டும்‌. விற்பனை ரசீது பெறும்‌ போது அதில் ‌விதையின் ‌பெயர் ‌ரகம்‌, குவியல் ‌ எண்‌, காலாவதி நாள்‌, அதற்கான தொகை மற்றும்‌ விற் பனையாளரின் ‌கையொப்பம் ‌உள்ளதா என சரி பார்த்து வாங்க வேண்டும்‌. விவசாயிகளுக்கு விதை உரிமம்‌ இன்றி இடை தரகர்களாக யாரேனும் ‌விதைகளை விற்பதும்‌, பதுக்கு வதும் ‌விதைக்கட்டுப்பாட்டு ஆணை 1983 மற்றும் ‌ விதைச்சட்டம்‌1966 மற்றும் ‌அத்தியாவசிய பொருட் கள்‌ சட்டம்‌1955 இன் கீழ்‌குற்ற செயலாகும்‌. மீறினால் ‌மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும்‌.  விதை விற்பனை நிலையங்களில்‌ கட்டாயமாக விலை மற்றும்‌ இருப்பு விபர பலகை வைக்க வேண்டும்‌.  விவசாயிகளுக்கு விதைகள்‌ தட்டுப்பாடின்றி கிடைக்க  செய்ய வேண்டும்‌. விதைகளை சரியான விலையில் ‌விற்பதுடன் ‌விற்பனை ரசீது வழங்க வேண்டும்‌. விதை களை முறையாக சேமித்து வைக்க வேண்டும் ‌என  விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. விதை சட்டங்களை கட்டாயம்‌ பின்பற்றி விவசாயி களுக்கு தட்டுப்பாடின்றி சரியான விலையில் ‌விதை களை விற்பதை விதை விற்பனையாளர்கள்‌உறுதி செய்ய வேண்டும்‌. தவறினால் ‌கடுமையான சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும்‌‌. மேலும்‌விதை தொடர்பான  புகார்களை விதை ஆய்வாளர்‌, உதகை 8105549018 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என அதில் கூறப் பட்டுள்ளது‌.

ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம் சேலம், ஜன.8- கீரைபாப்பம்பட்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும், என  வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்டவை யுடன் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்து  தாழம்பூ ஓடை வழியாக சாமிநாயக்கன்பட்டி ஏரி, மாங்குப்பம்  ஏரி, பூமிநாயக்கன்பட்டி ஏரி வழியாக தண்ணீரானது கீரை பாப்பம்பட்டி ஏரிக்கு வந்தடையும். தற்போது ஆக்கிரமிப்பு  காரணமாக 12 ஏரிகளுக்கு பல ஆண்டு காலமாக தண்ணீர்  வரவில்லை. இதனால் 42 ஹெக்டர் விவசாய நிலம் பாதிக் கப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றி,  ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியு றுத்தி புதனன்று கீரைபாப்பம்பட்டி ஏரியில் இறங்கி விவசாயி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, அப்பகுதியைச்  சேர்ந்த விவசாயிகள் கீரைபாப்பம்பட்டி பேருந்து நிலையத் திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஏர் கலப்பை, மாட்டு  வண்டி, டிராக்டர் உள்ளிட்டவைகளுடன் பேரணியாக வந்த னர். இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் பெரும் போராட் டம் நடைபெறும், என போராட்டக்காரர்கள் தெரிவித்துள் ளனர்.