districts

img

உடல்நலக்குறைவான யானையை தேடும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம், செப்.2- மேட்டுப்பாளையம் வனப்பகுதி யில் உடல் நலக்குறைவுடன் தண்ணீர் கூட அருந்த முடியாமல் தவிக்கும் காட்டு யானையை கண்டறிந்து சிகிச் சையளிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகா, தமிழகம் மற்றும் தமிழக காடுகளை இணைக்கும் முக்கிய வழித் தடமாக உள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதியை தங்களது வலசை பாதையாக யானைகள் பயன்படுத்தி வருவதால் இங்கு கூட்டம் கூட்டமாக நடமாடி வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளை யம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தூரிப் பாலம் பகுதியில் ஓடும் காட்டாறான கல்லாற்றில் யானையொன்று நீர் அருந்த முயன்றும் முடியாமல் மிகுந்த சோர்வுடன் ஆற்றைங்கரையோரம் கடந்து செல்வதை கண்ட சுற்றுலா பய ணிகள் சிலர் அதனை கைபேசி மூலம் படம் எடுத்தனர். இந்த வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் வெளி யான நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உணவோ, நீரோ உட் கொள்ள இயலாமல் மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் யானைக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண் டும் என்ற கோரிக்கை வன உயிரின ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டது.  

இதனையடுத்து, தும்பிக்கை அல் லது வாய் பகுதியில் கடுமையான புண் மற்றும் காயங்கள் உள்ளதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியினை வனத்துறையினர் துவக்கி னர். இதுபோல நோயுற்ற யானைகள் பெரும்பாலும் நீர் உள்ள இடங்களி லேயே சுற்றித்திரியும் என்பதால் யானையை தேடும் பணிக்காக நான்கு  சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள கல்லாற்றின் கரை யோர வனப்பகுதிகள் மற்றும் வனக் குட்டைகள், நீரோடைகள் உள்ள இடங் களில் யானையை தேடும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது.  மேலும், வன எல்லைகளில் காட்டு யிர்களின் தாகம் தீர்க்க வனத்துறையின ரால் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி களில் நீர் அருந்த வரும் யானைகளில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை  உள்ளதா என்றும் கண்காணித்து வரு கின்றனர். யானை இருக்கும் இடம் கண் டறியபட்ட உடன் அதற்கு சிகிச்சைய ளிக்கவும் ஒரு மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை சார் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.