districts

img

வறுமை படுகுழியில் தள்ளப்படும் கைத்தறி நெசவாளர்கள் அவலம் தீர ஆட்சியாளர்கள் கவனம் திரும்புமா?

ஆடையில்லா மனிதன் அரைமனிதன் என்பது பழமொழி. ஆனால் ஆடை தயாரிப் பவன் இன்று அரைமனிதாக உள்ளான் என் பது புதுமொழியாக மாறியுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் நெசவு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நெசவாளர்கள் கோவை காட்டன், டசர்  சில்க் மற்றும் பல ரகங்களில் சேலைகளை நெய்து வருகின்றனர். இந்த ரகங்களை பவர் லூம் தறியில் நெசவு செய்ய முடியாது. பெரும் பாலும் தனியார் கைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் மூலம் ஆர்டர் கொடுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வளிப் பதற்காக உருவாக்கப்பட்ட அரசு கூட்டுறவு சொசைட்டிகள் பெயரளவில்தான் செயல் பட்டு வருகின்றன. இதன் காரணமாக சொசைட்டி மூலமாக சேலைகள் உற்பத்தி என்பது இல்லை. இந்நிலையில் வெறுமனே அரசிடம் ஆண்டுதோறும் ரிபேட் தொகை பெறுவதற்கான வேலைகளைத்தான் பெரும் பாலும் கைத்தறி நெசவாளர் சங்கங்கள் செய்து வருகின்றன. சொசைட்டிகளின் செயல் பாடுகள் குறித்த விபரங்களை, கண்கா ணிக்கும் பொறுப்பில் உள்ள கைத்தறி துணி நூல் உதவி இயக்குநர் அலுவலகத்தில், ஆண்டுதோறும் எந்ததெந்த கைத்தறி நெச வாளர் சங்கங்களுக்கு தள்ளுபடி வழங்கப்ப டுகிறது என நேரடியாக சென்று கேட்டாலும்  வழங்குவதில்லை. தொடர்ந்து தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.) மூலம்  கேட்டாலும் பதில் தருவதில்லை. நிர்வாகத் தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ப தையே இது காட்டுகிறது. சொசைட்டி நிர்வா கத்தின் மெத்தனப்போக்கு மற்றும் நிர்வாக  சீர்கேடு காரணமாக தனியார் ஜவுளி உற்பத்தி யாளர்களே அதிகளவில் பயன்பெறுகின்ற னர். இவர்கள் சேலைகளை உற்பத்தி செய்து  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் தனியார் கடைகளுக்கும் விற் பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

தனியார் உற்பத்தியாளர் போதிய லாபம்  ஈட்டி வந்த போதிலும், கடந்த மூன்று மாதங்க ளாக கைத்தறி நெசவாளர்கள் பெற்ற வந்த கூலியில் 25 சதவிகிதத்தை குறைத்துள்ளனர். உதாரணத்திற்கு ரூ.1350 கூலியாக பெற  வேண்டிய சேலை ஒன்றுக்கு, ரூ.1050 மட்டுமே  கூலியாக பெற முடிகிறது. இதுகுறித்து  விசாரித்தால் சேலை விற்பனை இல்லை, பெருமளவில் ஸ்டாக் ஏற்பட்டுவிட்டது என வும், சேலை விற்றால்தான் நாங்கள் தொழில் நடத்தமுடியும் என்று கூறுகிறார்கள். தற் போது வாரம் ஒரு சேலைக்கு மட்டும் ஊடு  பாவு கொடுப்பதும் வற்புறுத்திக் கேட்டால் மேலும் ஒரு சேலைக்கு பாவு கொடுப்பது என்ற நடவடிக்கையில் கைத்தறி ஜவுளி உற் பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலை வாசி மத்தியில் கடினமான வாழ்கை சூழலில் நெசவாளர்கள் குடும்பமே உழைத்தால்தான் வாழ முடியும் என்ற நிலை உள்ளது. இதில்  வாரம் ஒரு சேலைக்கு கூலி பெற்று குடும் பத்தை நடத்த மிகுந்த சிரமப்பட்டு வரு கின்றனர். இச்சூழலில் வேறு வழியின்றி சிலர் நூறுநாள் வேலை கிடைத்தால் பர வாயில்லை என்று பஞ்சாயத்து அலுவல கங்களுக்கு சென்று வேலை அட்டை பெற வும், இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு ஏதா வது தொழில் செய்து பிழைக்கலாம் என்று  முயற்சிக்கின்றனர். கட்டுமானம், கோழிப் பண்ணை போன்ற வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொருளாதார சூழல் காரணமாக இவர்க ளது குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. உயர்கல்வியில் இடைநிற்றல் அதிகமாகி உள்ளது. எனவே, கைத்தறி நெசவாளர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய, மாநில அர சுகள் மாவட்டந்தோறும் கைத்தறி ஜவுளி சிறப்புக் கண்காட்சியை நடத்தி கைத்தறி சேலைகளை நேரடியாக விற்பனை செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக  ஏறியுள்ள பட்டு நூல் விலையை ஒன்றிய  அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர் சங்கங்க ளுக்கு கோஆப் டெக்ஸ் நிறுவனம் மூலம்  வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  தமிழக அரசே பட்டுநூலை கொள்முதல்  செய்து மானியத்துடன் நெசவாளர்களுக்கு நேரிடையாக  வழங்க வேண்டும். தனியாரி டம் தேங்கியுள்ள சேலைகளை மாநில அரசே  கொள்முதல் செய்ய வேண்டும். கைத்தறிக் கென்றே கூட்டுறவு வங்கிளை உருவாக்கி தேவையான கடன்களை குறைந்த வட்டியில்  வழங்கி தொழிலையும், தொழிலாளர்களை யும் பாதுகாக்க சீரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பதே நெசவாளர்க ளின் எதிர்ப்பார்ப்பாகும். 

-என்.கனகராஜ்
(கைத்தறி நெசவாளர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர்)