உடுமலை, ஆக. 7- தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைப்பராமரிப்புப் பணி களை தனியாருக்கு தரும் வகையில் மாநில நெருச்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என புதனன்று உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்ற தாராபுரம் கோட்ட சாலைப்ப ணியாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. சாலைப்பணியாளர் சங்கத்தின் தாராபுரம் கோட்டத் தலைவர் வெங்கிடு சாமி தலைமையில் நடைபெற்ற மாநாட் டில், மாநில நெடுச்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு தரும் வகையி லும், சுமார் 3 ஆயிரத்து 500 பணியாளர்க ளின் பணியிடங்களை ஒழிக்கும் வகை யில் மாநில நெடுச்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். நெடுச்சாலைகளில் தனியார் முதலாளிகள் சுங்கவரி வசூல் கொள்ளை நடத்த அனுமதிக்ககூடாது. வேலையின் போது உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் களுக்கு கருணை அடிப்படையில் வேலையை விரைந்து வழங்க வேண் டும், ஒப்புக் கொண்ட கோரிக்கைகளை மடத்துக்குளம் உதவிக் கோட்டப் பொறியாளர் நிறைவேற்றாததைக் கண்டித்து ஆக.22 அன்று தாராபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட ஐந்து உட் கோட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்து வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநிலத்தலைவர் மா. பாலசுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை கோட்டச் செயலாளர் தில் லையப்பனும், வரவு செலவுகள் அறிக் கையை கோட்டப் பொருளாளர் முருக சாமியும் முன்வைத்தனர். மேலும், வேளாண்துறை சங்கத்தின் மாவட்டத் தலைவர் வைரமுத்து, அரசு ஊழியர் சங்கத்தின் பெரியசாமி, புஷ்ப வள்ளி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங் கத்தின் மாநில துணைத்தலைவர் சிங்க ராயன் சிறப்புரையாற்றினர். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ராணி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மாநிலச் செயலா ளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெகதீஸ் வரன் நன்றி கூறினார்.