தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் லலித்கலா அகாதெமியில் நடைபெற்று வரும் புகைப்படக்காட்சியை சனிக்கிழமையன்று (பிப்.11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் உடனிருந்தார். பிப்.15ந் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையாளர்கள் கட்டணமின்றி பார்வையிடலாம்.