districts

img

பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி மலைக்குறவர் இனமக்கள் காத்திருப்புப் போராட்டம்

சேலம், டிச.22- ஆத்தூர் வருவாய் கோட்டத்தில் உள்ள மலைக்குறவர் மக்களுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி கோட்டாட் சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கெங்கவல்லி, பெத்த நாயக்கன்பாளையம், தலைவாசல், கோட்டை, முள்ளுவாடி, துலுக்கனூர், கல் லாநத்தம், அம்மாபாளையம், கடம்பூர், செல்லியம்பாளையம், தெடாவூர், உள் ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரக்கணக்கான பழங்குடியின மலைக் குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பழங்குடியின சாதிச்சான்றி தழ் வழங்காததால் கல்வி மற்றும்  பொரு ளாதாரத்தில் பின்னோக்கி இருந்து வருவ தோடு, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாமலும், அரசின் உதவி மற்றும் நலத்திட்டங்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, இவர்களுடைய கல்வி மற்றும்  பொருளாதாரம் மேம்பட மலைக்குறவ இன மக்களுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசம டைந்த மலைக்குறவர் இனமக்கள் தங்களது குழந்தைகளுடன் நேரு நகரில்  இருந்து ஊர் வலமாக சென்று ஆத்தூர் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட முயன் றனர். அப்போது, அவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தியதால், காவல் துறை யினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இதனைத்தொடர்ந்து மலைக்குறவர் இனமக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு தரையில் அமர்ந்தபடி சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி கண்டன முழக் கங்களை எழுப்பினர். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், மாநிலப் பொரு ளாளர் ஏ.பொன்னுசாமி, மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் செந்தில் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் ஏ.முருகேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் மற்றும் மலைகுறவர் இன  மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்குவது தொடர்பாக தலவிசா ரணை மேற்கொண்டு நான்கு வார காலத் திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பழங் குடியினர் நலவாரிய அட்டை இல்லாதவர் களுக்கு உடனடியாக அடையாள அட்டை  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வன உரிமைச் சட்டம் அடிப்படையில் மலை வாழ் மக்களுக்கு பாரம்பரிய தொழில்களை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப் படும். முல்லைவாடி  கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா தொடர்பாக தல விசா ரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சி யர் எழுத்துபூர்வமாக உறுதியளித்தார்.

;