districts

img

கோழி பண்ணையை மூட வலியுறுத்தி பூச்சிகளுடன் புகார் அளிக்க வந்த பொதுமக்கள்

திருப்பூர், ஜூலை 8- கோழி பண்ணையில் இருந்து உற் பத்தியாகும் புதிய வகை ஈக்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள் ளதாக சின்னக்காம்பாளையம் பகுதி  மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் பூச்சிகளுடன் வந்து புகார் அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று புகார் அளிக்க வந்த சின்னக்காம்பாளையம் பொது மக்கள் கூறியதாவது, தாராபுரம் வட் டம் சின்னக்கம்பாளையம் கிராமப் பகு தியில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து  வருகின்றனர். இப்பகுதியில் நந்து பீடிங் தாய்க்கோழி பண்ணை என்னும்  கோழி பண்ணை இயங்கி வருகிறது.  இந்த பண்ணையில் இருந்து வினோத மான ஈக்கள், பெரிய வண்டுகள், அடை யாளம் தெரியாத பல பூச்சி வகைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. உணவுத் தட்டுகளில் அமர்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இப்பூச்சிகள் உடம்பில் பட்டால் அரிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே கோழி கழிவுகளின் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இது  போன்ற பூச்சிகளாலும் தற்போது அவ திக்குள்ளாகிறோம். மேலும், சோளம்,  கத்தரி, தக்காளி, வாழை, தென்னை,  மல்பெரி செடி, பூக்கள், கீரை வகைக ளில் இந்த ஈக்கள் அமர்ந்து செடி கொடி களை நாசம் செய்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக திடீரென புதிய  வகை பூச்சி உற்பத்தியாகி இப்பகுதி  முழுவதும் வேகமாக பரவி வருகிறது.  ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை செல்கி றது. அருகில் உள்ள சின்னபுதூர், கோவிந்தாபுரம் போன்ற பகுதிகளின் பல தாய் கோழி பண்ணைகள் இருப்ப தால், இப்பூச்சி வகைகள் அங்கும் உற் பத்தியை பெருக்கினால் 15 கிராமங்கள்  வரை இது பரவும் அபாயம் உள்ளது.  எனவே இக்கோழி பண்ணையின் உரி மத்தை ரத்து செய்து பண்ணையை மூட  வேண்டும் என தெரிவித்தனர்.