திருப்பூர், அக்.19 - பல்லடம் அருகே இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள், இரவு வேலைக்குச் சென்ற கல்லூரி மாணவர்களை சாதியை கேட்டு சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், வலையபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கள் கவின், அஸ்வின், புகழேந்தி. இதில் கவின் சிக்கண்ணா அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவராவார். மற்றொருவரின் தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் படிப்பை பாதியில் நிறுத்தியவர் ஆவார். மூவரும் 63 வேலம்பாளையம் பகு தியில் ஒரு விசைத்தறி கூடத்தில் இரவு நேரம் வேலை செய்துள்ளனர். நள்ளிரவு 2 மணி அளவில் தேனீர் சாப்பிடுவதற்காக 63 வேலம் பாளையம் நால்ரோடு பகுதிக்கு வந்துள்ள னர். அப்போது பல்லடம் காவல்துறையின் ஆய்வாளர் ஜெயதேவி உள்ளிட்ட காவலர் கள் ரோந்துப் பணியாக அங்கு வந்துள்ளனர். சாலை ஓரம் செல்பி எடுத்துக் கொண்டி ருந்தவர்களை காவல்துறையினர் எந்த கேள்வியும் இல்லாமல் திடீரென லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மூவரும் அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர். ஓடியவர்களில் இரண்டு பேரை பிடித்த காவல்துறையினர், அவர்களை சாலை ஓரம் முட்டி போட வைத்து கால் பாதத்தில் தடியால் தாக்கியுள்ளனர். மேலும். அந்த இளைஞர் களிடம் ஜாதியை கேட்டு உள்ளனர். பட்டியல் சாதியினர் என தெரிந்த நிலையில், குற்றம் செய்பவர்கள் என்று சொல்லி தாக்கியுள்ள னர். மேலும் அங்கிருந்த காவலர் ஒருவர், பதவி உயர்வு பெறுவதற்கு வழக்குப் பதிய வேண்டும் என்று சொல்லி அடித்துள்ளார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பல்லடம் வட் டாரத்தில் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப் பட்டு வைரலாக பரவியுள்ளது. கல்லூரியில் படிக்கக் கூடியவர்கள் ஏழ்மை நிலையில் இரவு நேரம் வேலைக்கு சென்றால், அவரி டம் விசாரித்து தெரிந்து கொள்வதற்கு மாறாக, காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவலர்கள் மற்றும் ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.