districts

அப்பார்ட்மெண்ட்டில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை – பரபரப்பு!

கோவை, மே 19- சென்னை அப்பார்ட்மென்ட் பால்கனியில் இருந்து தவறி விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தையின் தாய்,  கோவையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வந்த தம்பதி வெங்கடேஷ்(35) ரம்யா(33). இருவரும் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி பிரபல ஐடி நிறுவனங்களில் ஊழியர் களாக பணிபுரிந்து வருகின்றனர். தம்ப திக்கு மெதந்த்(5) என்ற மகனும், ஏழு  மாதத்தில் கைக்குழந்தையும் உள்ளது.    இந்நிலையில் கடந்த சில வாரங்க ளுக்கு முன்னர் திருமுல்லைவாயல் அப்பார்ட்மெண்டின் பால்கனியில் இருந்து ரம்யாவின் 7 மாத கைக்கு ழந்தை தவறி விழுந்துள்ளது. பின்னர்,  அக்குழந்தை பத்திரமாக மீட்கப்பட் டது. இச்சம்பவம் சமூக வலைதளங்க ளில் வைரலானது. மேலும், அக்கம்  பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள்  என பலரும் ரம்யாவின் அஜாக்கிர தையை கண்டித்ததாக தெரிகிறது. அன்று முதல் ரம்யா தீவிர மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. இதனால் கணவர் வெங்க டேஷ் ரம்யாவிற்கு ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக குழந்தைகளு டன் ரம்யாவின் சொந்த ஊரான காரமடைக்கு அழைத்து வந்துள்ளார். காரமடை பெள்ளாதி சாலையில் உள்ள  ரம்யாவின் தந்தையான வாசுதேவன் வீட்டில் தங்கி வெங்கடேஷ் ஒர்க் ப்ரம்  ஹோம் செய்து வந்துள்ளார். இந்த  நிலையில், தீவிரமான மன அழுத்ததில் இருந்து வந்த ரம்யாவிற்கு மன உளைச்சலில் இருந்து வெளியே வர  கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வந்துள் ளது.  இந்த நிலையில் ரம்யாவின் தந்தை  வாசுதேவன்(67), தாய் புஷ்பா(60) உள்ளிட்ட இருவரும் ஒரு திருமண நிகழ்விற்கு வெள்ளியன்று சென்று விட, கணவர் வெங்கடேஷ் படுக்கை யறையில் உறங்கியுள்ளார். குழந்தைக ளும் உறங்கி விட்ட நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்த ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர்,படுக்கையில் இருந்து எழுந்து பார்த்த வெங்கடேஷ் ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருப் பது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அவரை மீட்டு காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந் துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த காரமடை காவல்  ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையி லான போலீசார், சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.