திருப்பூர், ஜூலை 8- திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.69 கோடி மதிப்பீட் டில் சாலை மேம்பாட்டுப் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சனியன்று துவக்கி வைத்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற் இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாந கராட்சி 4 ஆம் மண்டலக்குழுத்தலைவர் இல. பத்மநாபன், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமி, உதவி பொறியாளர்கள் செந்தில் குமார், கிருஷ்ண மூர்த்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அரசுதுறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.