கோவை, டிச.18- ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பொதுமக்கள் வழங்கிய பொன்னினங்கள் 28.906 கிலோ தங் கத்தை உருக்க, அறநிலைத்துறை அமைச்சர் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தார். கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மக்கள் வழங்கிய காணிக்கைகள் பயன்பாட் டில் இல்லாதவை பிரித்தெடுக்கப்பட்ட 28 கிலோ 906 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய் செய்திடும் வகையில் புதனன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவி லில் பாரத் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்கம் உருக்காலைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றம் நீதிபதி துரை சாமி ராஜு முன்னிலையில் வங்கி அதி காரிகளிடம் 28 கிலோ 906 கிராம் ஒப் படைத்தார். இதில், மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் முரளி கிருஷ்ணன் மற் றும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாச மூர்த்தி மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சி யர் கேத்தரின் சரண்யா கோவில் அறங் காவலர்கள் மஞ்சுளா ஆனைமலை பேருராட்சி தலைவர் கலைசொல்லி சாந்தலிங்ககுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாசாணியம் மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் கோ வில் வளாகத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வு செய்தும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பேட் டரி கார் போன்றவற்றை பார்வையிட் டார்.