திருப்பூர், ஜூன் 29 - திருப்பூர் மாநகராட்சியில் 15 ஆண் டுகளுக்கு மேலாக போடப்படாத தார் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சி 17 ஆவது வார்டு மற்றும் 19 ஆவது வார்டுக்கு உட் பட்ட டி எம் எஸ் நகர் மெயின் ரோடு, 17 ஆவது வார்டுக்கு உட்பட்ட செல்வ ராஜா நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்க வலியுறுத்தி மிகப்பெ ரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான மக் கள் பயன்படுத்தி வரக்கூடிய டிஎம்எஸ் நகர் பிரதான சாலையை கடந்த 15 ஆண் டுகளாக புதுப்பித்து தார் சாலை அமைக் கவில்லை. எனவே உடனடியாக இங்கு புதிய தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் செல்வராஜா நகர் பிரதான சாலை, செல்வ லட்சுமி நகர் யூ விரிவு ஆகிய பகுதிகளிலும் தார் சாலை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் எஸ் நகர் கிளை வலியுறுத்தி உள்ளது. சாலை வசதியுடன் மேற்கண்ட பகுதி யில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி செல்வராஜா நகர் மற்றும் டி எம் எஸ் நகர் ஆகிய பகுதிகளில் பதாகை கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பிரச் சனை தீராவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறி விக்கப்பட்டுள்ளது.