நாமக்கல், ஜூலை 29- திருச் செங்கோடு அருகே குழந்தைகளை அடைத்து வைத்து கொலை செய்யும் நோக்கில் கொடூர நடவடிக்கையில் ஈடுபட் டவர்களை கைது செய்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்செங்கோடு அருகே சத்தியநாயக் கன் பாளையத்தில் பிரபு (40) மேகலா (35) ஆகிய தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று அந்த வீட்டிற்கு அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டி ருந்தனர். அப்பொழுது செந்தில்குமார் என்பவர் குழந்தைகளை வீட்டில் அடைத்து பூட்டி வைத்துள்ளார். இதில் ஒரு சிறுவன் கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது செந்தில் குமார் என்பவர் தஸ்மிதா என்ற சிறுமியை கத்தியால் கழுத்தில் வெட்டி உள்ளார். மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவி னர்கள் சென்றபோது வீட்டுக்குள் வந்தால் குழந்தையை கொன்று விடுவேன் என்று கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளார். பின்னர் கத்தியுடன் வெளியே வந்த செந்தில்குமார், நியாயம் கேட்க சென்ற முத்து வேலை சரமாரியாக வெட்டியுள்ளார். தங்கராஜ் என்பவரையும் துரத்திக்கொண்டு அவரையும் வெட்டி உள் ளார். இதுகுறித்து திருச்செங்கோடு காவல்து றைக்கு தகவல் தெரிவிதனர். மேலும், சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். அச்சிறுமி தற்போது கவ லைக்கிடமாக உள்ளார். கொலை வெறி யோடு சுற்றுபவரை கைது செய்யக்கோரி, குமரமங்கலத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்து, சம்பவ இடத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் சென்று பாதிக்கப்பட் டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கூறு கையில், ஐந்து குழந்தைகளை அடைத்து கொலை செய்ய முயற்சித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஒன்றியக் குழு உறுப்பினர் ஈஸ்வரன் ,கிளைச் செயலாளர் பூபதி உட்பட பலர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்த னர்.