நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கண்டித்து, வியாழனன்று உடு மலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு நகரச் செயலாளர் தண்டபாணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதணன், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்ச லிங்கம், நகரகுழு உறுப்பினர்கள் தோழன் ராஜா, விஸ்வநாதன், வசந்தி உட் படட திரளானோர் கலந்து கொண்டனர்.