districts

img

மாணவிகளை தவிக்கவிட்ட பேருந்து ஊழியர்கள்

நாமக்கல், செப்.26- பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல், இரண்டு பள்ளி மாணவி களை திட்டமிட்டு அடுத்த ஊரில் இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துநர் செயலை கண் டித்து மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், நல்லாம்பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்ததில் இருந்து, திருச் செங்கோடு, குமாரமங்கலம், எலச்சி பாளையம், நல்லாம்பாளையம், வையப் பமலை, குருசாமி பாளையம், ஆண்டக லூர்கேட், ராசிபுரம் என பேருந்து வழித் தடம் கொடுத்திருந்தும், சாலை அகல மாக்கும் பணி நடந்த பிறகு நல்லாம்பா ளையம் பேருந்து நிறுத்தத்தில் பேருந் துகள் நிற்பதே இல்லை.  அரசு போக்குவரத்து கழகத்தை பொருத்தவரை நல்லாம்பாளையம் என்ற கிராமம் இருப்பதோ, பொதுமக் கள் அங்கு வசிப்பதோ தெரிவதில்லை. பலமுறை போராட்டம் நடத்தியும் தனி யார் பேருந்து உரிமையாளர் சங்கத்தில் முறையிட்டோம். இதனை அடுத்து இந்த  பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை வைக் கப்பட்டது. இதன் பிறகு சில நாட்கள் மட் டும் தனியார் பேருந்துகள், அரசு பேருந் துகள் நின்று சென்றது. தற்போது மீண் டும் பழைய நிலையே தொடர்கிறது. இந்நிலையில் புதனன்று மதியம்  தேர்வு எழுதிவிட்டு வையப்பமலையி லிருந்து ஆத்தூர் டிப்போவை சேர்ந்த  அரசு  பேருந்தில், 8 ஆம் வகுப்பு படிக் கும் இரண்டு சிறுமிகள் பேருந்தில் ஏறி,  நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தத் தில் இறங்க பயணச்சீட்டை கேட்டுள்ள னர். இதனை தர மறுத்ததோடு நல்லாம் பாளையத்தில் பேருந்து நிற்காது எனக் கூறி இரண்டு கிலோமீட்டர் தள்ளியுள்ள  கொன்னையார் பகுதியில் கொண்டு போய் இறக்கி விட்டுள்ளனர். மாணவி கள் இருவரும் வீட்டுக்கு வராததை கண்டு பெற்றோர்கள் மன உளைச்ச லுக்கு ஆளாகியுள்ளனர். தேடிப் பார்த்த போது கொன்னையாரிலிருந்து நடந்து வந்து கொண்டிருப்பதை அறிந்தோம். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மறி யலில் ஈடுபட்டோம், என்றனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த எலச்சி பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்தால் திருச்செங் கோடு கிளை மேலாளரிடம் பேசி பேருந் துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்வதாக வும், பெண் பிள்ளைகளை இதுபோல் இரண்டு கிலோமீட்டர் தள்ளி இறக்கி விட்டு அவமரியாதையை பேசிய நடத்து நர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறைக்கு தெரி விப்பதாகவும் உறுதியளித்தனர். இத னையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.