நாமக்கல், ஜூலை 13- எலச்சிபாளையம் அருகே நகைக்கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்தை கண்டித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் அருகே உள்ள நல்லம் பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர் (50). லாரி ஓட்டுநரான இவர், மகா ராஷ்டிராவிற்கு லாரியில் செல்லும் போது, சாலை விபத்து ஏற்பட்டு அவரது கால் இரண்டாக துண்டாகி விட்டது. இதையடுத்து அவர் மகாராஷ்டிராவில் உள்ள மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை தேவைக்காக சங்கரின் மனைவி மகேஸ்வரி (40), தனது வீட்டிலுள்ள மூன்று பவுன் தங்க நகையை அடமானம் வைக்க எலச்சிபாளையத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இது போலி நகை என வாங்க மறுத்து விட்டதாக கூறப்படு கிறது. மேலும், அவரை வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்திய தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகேஸ்வரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித் தார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் ஆகி யோர் தலைமையில், பாதிக்கப் பட்ட மகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் எலச்சிபாளையம் இந்தியன் வங்கி முன்பு காத்திருக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி நிர்வாகம் காலை 11 மணி முதல் மாலை 3:30 வரை போராட் டத்தை கண்டு கொள்ளாதால், போராட்டகாரர்கள் எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எலச்சிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், வரு வாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் அனுராதா, இந்தியன் வங்கி மாவட்ட மேலாளர் முருகன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது பிரச்சனைக்கு உரிய தீர்வு காணுவதாக அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந் தனர். விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் கண வரை காப்பாற்ற, நகையை அடகு வைக்க சென்றவரை அவமானப் படுத்திய வங்கி நிர்வாகத்தின் செயல் அப்பகுதி மக்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.