districts

img

பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகத்தின்‌ அராஜகம்

சிஐடியு ஆவேசம் தருமபுரி, டிச.21- பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர் வாகத்தின் அராஜகத்தை எதிர்த்து போராடிய பெண் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிஐடியுவினர் தருமபுரியில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ஒரக்கடத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையின்‌ அராஜகத்தை எதிர்த்தும், உரிமை களுக்காக போராடிய பெண் தொழி லாளர்களிடம்  ஆண் காவலர்கள் அராஜகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதை தட்டிக்  கேட்ட தொழிற்சங்க தலைவர்க ளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனை கண்டித்து தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு சிஐடியு வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி. நாகராஜன்‌ தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலாளர் சி.நாக ராசன், மாநிலக்குழு உறுப்பினர் சி. கலாவதி, மாவட்ட பொருளாளர் ஏ. தெய்வானை, மாவட்ட நிர்வாகி கள்  பி.ஆறுமுகம், சி.ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

;