உடுமலையில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கு காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் மா.பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், கோட்ட தலைவர் வெங்கிடுசாமி, கோட்ட செயலாளர் தில்லையப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.